ஆவணி மாதம் வந்தாலே விரதங்களும் கூட வந்துவிடும் இதில் பெண்களின் சௌபாக்கியத்திற்கும்
சுமங்கலிகளுக்கென்று ஒரு விரதமும் மிகவும் சிறப்பாக பெண்களால் செய்யப்டுகின்றன
ஸ்ரீவரலட்சுமி விரதம் ஜன்மாஷ்டமி விரதம் மங்களாகௌரிவிரதம் நாகபஞ்சமி விரதம் கருடபஞ்சமி விரதம் ,வினாயகசதுர்த்தி விரதம் என்று ஆவணியை பல விரதங்கள் அணைக்கின்றன
விரதம் இருப்பதால் நம் மன உறுதி மேலும் பலப்படுகிறது மனவலிமையால் செய்யமுடியாத காரியங்கள் தான் உண்டோ?
இந்த விரதத்தை சம்ஸ்கிருதத்தில் உபவாசம் என்கின்றனர் வாசம் என்றால் இருத்தல்
உபவாசம் என்றால் பக்கத்தில் இருத்தல் என்று பொருள் கொள்ளலாம் யார் பக்கத்தில் ?
நிச்சியமாக இறைவன் அருகில் தான் .....இது எப்படி சாத்தியமாகிறது ? ஆம் எப்போது மனம் ஒருமுகமாக ஒரே சிந்தனையுடன் ஒரே காரியத்தில் ஈடுபடும்போது அது இறைவன் சமீபம் போகும் சக்தி பெறுகிறது
மனம் சிதற உணவும் ஒரு காரணமாக அமைகிறது உணவிலும் சத்வ உணவு ரஜசு தமசு என்ற உணவுகள் இருக்கின்றன .கபம் பித்தம் வாதம் என்ற பிரிவிகள் நம்முடலில் எத்தனைத்தேவையோ அந்த அளவு தான் இருக்க வேண்டும் இவை குறைவோ கூடியோ இருக்க நோய் வருகிறது ஆயுர்வேதம் இதைக்கொண்டு தான் செயல்படுகிறது
உபவாசம் வரும் தினங்களில் துளசி தீர்த்தம் மட்டும் எடுப்பது மிக உன்னத முறையாகும் சிலருக்குச் சர்க்கரை நோய் இருக்குமானால் ஒரு வேளை மட்டும் கஞ்சியோ சேர்த்துக்கொள்ளக்கூடிய பழங்களோ வயதானவர்கள் எடுத்துக்கொள்ளலாம்
இந்த விரதங்கள் கடைப்பிடிக்க ஒரு கட்டுப்பாடு நம்மால் மிக எளிதாக உருவாக்க முடிகிறது
வயிற்றுப்பசி விரதத்தன்று வராமல் இருக்க மனதை ஒரேநிலையாக வைத்து மனப்பசியை வளர்க்க
வேண்டும் மனதில் கூட பசிக்குமா? ,,மனப்பசி என்பது இறைவனின் சான்னித்யம் பெறுவதே .
அதுவே ஒரே இலக்காக இருந்தால் வயிறு பசிக்காது வடநாட்டில் வசந்த நவராத்திரியின் போது
வெறும் தண்ணீர் மட்டும் குடித்து இரவில் ஒரு வாழைப்பழம் மட்டும் எடுத்து அமாவாசையிலிருந்து
நவமி வரை விரதம் இருப்பவர்கள் பலர் சிலர் பள்ளி ஆசிரியர்கள் நான் இதைப்பற்றிக் கேட்டபோது எங்களுக்குப் பசி தெரிவதில்லை என்று சொன்னார்கள்
விரதத்தின் போது சூரியோதயம் முன் எழுந்து பல்துலக்கி பின் குளித்தல் வேண்டும் இதுவே புண்ணிய நதிகளோ ஆறுகளோஇருந்து அதில் குளிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் மனம் நாமஜபத்தில் இருக்க , பூஜை செய்ய சங்கல்பம் செய்துக்கொள்ள வேண்டும்
விரத்த்தன்று பகலில் தூங்கவோ வேறு ரசாபாசங்களிலோ ஈடுபடக்கூடாது மனதைத்தத்தளிக்கச்செயுயும் விஷயங்களிலிருந்து தூர விலகுவது நல்லது ஆன்மீகப்புத்தகங்கள் படிக்கலாம் அல்லது ஈச்வர நாமாக்களை எழுதலாம் .இதனால் புறத்தூய்மை அகத்தூயமை கிடைக்கவும் எல்லா நிலைகளிலும் சமபாகமாக எண்ணும் சக்தியும் கிடைக்கிறது
விரதம் அனுசரிப்பதால் தானாகவே தியான நிலை வருகிறது எப்படி என்றால்
பிரசாதம் செய்கிறோம். மனம் முழுவதும் இந்த மோதகம் பிள்ளையாருக்கே என்ற எண்ணமும்
அது நன்றாக அமையவேண்டும் என்ற சிரத்தையும் அந்தச்சிரத்தையால் வரும் கவனமும் தான் . இதெல்லாம் ஒரு யோகம் தான், தியானம் தான் . கோயிலின் பிரசாதம் சுவைக்க இதுவும் ஒரு காரணம் என்று தொன்றுகிறது . விரதத்தினால் ஈகோ அழிந்து மனித நேயம் வளர்கிறது பணிவும் தொடர்கிறது
நம் உடல் ஒரு இயந்திரம் தான்.அது தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருக்கிறது அந்த மசீனுக்கு ஒரு மாதத்தில் ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா ?
ஆகையால் விரதம் என்பது நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று .
Saturday, October 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment