என்று மகளிர் தினம்?
மகளிர் செல்லட்டும் இரவினிலே
மனப்பயமின்றி சுதந்திரமாய் தனிமையிலே,
நெஞ்சில் கலக்கம் இல்லாமல்,,,,,,,
அன்றுதான் நம்க்கு "மகளிர் தினம்'
பெண் சிசு அழிக்கும் நிலைப் போகட்டும்
ஆண்களின் சர்வாதிகாரம் ஒழியட்டும்
சமநிலைப் பாங்கு தோன்றட்டும்
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம்
கற்புநிலை இருவருக்கும் ஒன்றே
உணர்வுகளும் மதிப்பும் ஒன்றே
என்று இந்த ஏற்றத்தாழ்வு மாறுமோ,?
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம் "
தாயும் ஆகிறாள் காதலியும் ஆகிறாள்
விண்வெளியிலும் பறக்கிறாள்
அதிகாரியாகவும் ஆகிறாள்,
விளையாட்டிலும் முன் நிற்கிறாள்
எத்துறையிலும் திறமை
அதுவே நமக்குப் பெருமை
அடக்கம் அவ்ளுக்குத் தேவை
ஆனால் அடிமைநோக்கு ஏன் ?
மகனைக் காணத் துடிக்கும் தாய்
இருப்பதோ முதியோர் இல்லம்
என்று இந்நிலை மாறுமோ?
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம்
மாட்டுப்பொங்கல் போல் ஒருநாள்.
மாலைப் போட்டு வர்ணம் பூசி
வயிறு புடைக்க்த் தீனி வைத்தால்
மாட்டின் உழைப்புத்தான் மாறுமா ?
அதன் உண்மை நிலை மறந்து போகுமா?
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment