Wednesday, May 19, 2010

எங்கும் வண்ணங்கள் எங்கும் உற்சாகம்

ஹோலி ,,இந்தப்,பெயரைக் கேட்டாலே வண்ணங்களும் பிச்காரி என்ற த்ண்ணீர்
பீச்சும் குழாயகளும், வண்ணப்பொடிகளும் கறுப்பு பெயின் டும்
ஒருவர்கொருவர் அன்புடன் தழுவலும் தான் ஞாபகம் வருகிறது ம்ஹராஷ்ட்ராவில்
இது மிகப் பிரமாதமாகக்
கொண்டாடுவார்கள் அதை ரங்க பஞ்சமி என்பார்கள்,,வசந்தக்காலத்தின்
நுழைவு நாள் இது சிவராத்திரியுடன் "சிவசிவா "என்று குளிர் போய்ப் பின்
வசந்த காலம் அழகுடன் பூக்களுடன் அழகாகக்கோலமிடும்,
,,இதில் செம்படவர்கள் அதிகம் பங்கேற்று தங்களை மறந்துக் களிப்பார்கள்
எல்லோரும் ஒவ்வொரு நடு சந்தியிலும் மேலே சுமார் 6அல்ல்து ஏழுமாடி
உயரத்தில் ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம் ரூபாயகள் வசூல் செய்து மேலே
தனியாகக்கட்டிவிடுவர்கள் இதேப்போல் தான் ஜன்மாஷ்டமியன்றும் நடக்கும்,
பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும் இதை உடைக்க ஒரு "டோலி"என்ற குமபல் வரும்
அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும் . பாட்டு பாடிக்கொண்டு "கோவிந்தா
ஆலா ரே என்று கொட்டு கொட்டிக்கொண்டும் வருவதைப் பார்த்தால் நம் உடலும்
சிலிர்க்கும்
பின் ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டு முக்கோணம் போல் மேலே ஏறி அதை
எட்டிப் பிடித்து உடைப்பார்கள் அவர்களை ஏற்விடாமல் த்ண்ணீர் அவர்கள்
மேல் கொட்டுவதும் உண்டு
,,அவர்கள் சாமர்த்தியமாக எடுத்தால் அந்த
ரூபாய்கள் அவர்களுக்கே ,,,,

ஜீஜா பாய் லக்கூஜிஜாதவ் மஹராஜின் பெண்,,அவள் தன் ஐந்து வயதில்
விளையாட்டாக எல்லோர் மேலேயும் வண்ணக் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்க
சிறு பையன் "சாஹூஜி 'மேல் பட்டுவிட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே
தன் மகனுக்கும் ஜீஜாபாயிற்கும்
திருமணம் நிச்சியம் செய்து விட்டார் பின் சில காலம்ம்கழித்துத் திருமணம்
நடைப்பெற பின் வீர சிவாஜி பிறந்தார்
மஹராஷ்டாராவும் பிறந்தது இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரண்மாகிறது
பிரஹ்லாதனை எப்போதும் நராயணா என்றே சொல்ல அவந்து தந்தை
ஹிரண்யகசிபு கோபத்தின் உச்சிக்குச்சென்றுவிட்டான் ஆகையால் அவனைக்கொல்ல
பலவிதமாக முயன்றான் மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டான் யானைக்காலால
மிதிக்கும்படி செய்தான் ஆனாலும் நாராய்ணன பிர்ஹ்லாதனைக்காப்பாற்றி
விட்டார் இதனால் ஹோலிகா என்ற சகோதரியை அழைத்து அக்னி மூட்டி அதன்
நடுவில் பிர்ஹ்லாதனை மடியில் வைத்துகொள்ள அழைத்தாள் ஹோலிகா .
பிரஹ்லாதன் அதன்படியே செய்தான் அவன் வாய் மட்டும் நாராயணா என்று சொன்னபடி
இருக்க ஹோலிகா மடியில் அமர்ந்தான் ஹோலிகா நெருப்பும் தன்னைப்பாதிக்காமல்
இருக்கும் வரம் பெற்றிருந்தாள்
அனால் அந்த நாராயணா என்ற நாமம் பிரஹ்லாதனைக்காப்பாற்றிவிட்டது
ஆனால் ஹோலிகா அக்னியில் மடிந்தாள் இதனால் சோட்டி ஹோலி என்ற நாளில்
வடக்கில் பல குச்சிகள் கட்டைகள் சேர்த்து மலைப்போல் குவித்து
அதை எரிப்பார்கள்
இந்த நாளில் தான் சிவபெருமானால் மன்மதனும் எரிக்கப்பட்டான் ஆகையால்
மன்மத தகனம் என்றும் சில மாகாணங்களில் கொண்டாடுகின்றனர் தமிழ் நாட்டிலும்
மன்மத தகனம் கொண்டாடி கூத்து என்ற பெயரில் இரவில் நாடகம் நடத்துவார்கள்

காமதகனத்தைக்குறித்து தமிழ் நாட்டிலும் சில இடங்fகளில் கொண்டாடப்படுகின்றன ,

மதுரா பிருந்தாவன் ,,,இங்கு ஹோலி ராதா கிருஷ்ண பாவத்துடன்
கொண்டாடப்படுகிறது
ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்துக் கண்ணன் தன் அம்மா ய்சோதையிடம் சென்று"அம்மா
நான் மட்டும் ஏன் கருப்பு ராதா மட்டும் ஏன் இவ்வள்வு சிவப்பு என்கிறார்
..யசோதைக்கு
பதில் சொல்லத்தெரியவில்லை அப்போது கிருஷ்ணர் ஒரு கருப்பு வர்ணம் குழைத்து
ராதாவின் அழ்கியமுகத்தில் பூசி அவளையும் கருப்பாக்கினாராம் ,இது
ராதாவின் எண்ணம்
ஆக இருந்ததாம் அதை அவர் அறிந்து இந்த மாதிரி விளையாடினார் என்கிறார்கள் .
அதனால் அங்கு ஹோலி கலர் ஒருவருக்கொருவர் முகத்தில் பூச ராஸலீலா என்ற
நடனமும் ஆடுகிறார்கள் பிஹாரி என்ற க்விஞர் ஹிந்தியில் இது பற்றி கவிதை
எழுதி
இருக்கிறார் மிகவும் மட்டமாக ஹோலி களிப்பது பிஹாரில் தான் ,தண்ணீருக்கு
பதில் சாணம்
கரைத்து ஊற்றுவார்கள் பஸ்ஸின் சன்னலினுள் சாணி உருண்டையும் வீசி எறிவார்கள்
நான் ஒரு தடவை "கயா "போன போது தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது
வெளியில் நடந்தால் சாணம்கரைத்து தலையிலும் விடுவார்கள்
சிலர் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று பெண்களின் மேல் நீரைக்கொட்டி
பின் கலரைக் கைக்குவந்த இடத்தில் கன்னத்தில் தடவிவிடுவார்கள்.
அன்று போலீஸும் ஒன்றும் செய்யமுடிவதில்லை தவிர "பாங்"என்ற சரக்கு வேறு
{ஊமத்தம்பூவின் சாரோ } உள்ளே போயிருக்கும் ,

ஜெய சிவசங்கர் என்ற ஹிந்தி சினிமாப்பாடல் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது நான்
தில்லியில் ஹோலியின் போது கதவை அடைத்தபடி
உள்ளே உட்க்கார்ந்தாலும் தபதப என்று ஒரு பட்டாளமே உள்ளே வந்துவிடும் ஐயோ
எனக்குக்கலர் அலர்ஜி என்று அலர பின் போவார்கள்

எல்லோருக்கும் என் ஹோலி வாழ்த்துக்கள் அன்பைக் கொடுப்போம் அன்பினை வளர்ப்போம்

No comments: