"அப்பப்பா ரொம்ப தலைவலி ,,,,யார் அங்கே ,? சேவகனை உள்ளே வரச்சொல் " தலைவலியுடன் கத்தினார் அந்த அரசர் .
சேவகனும் உள்ளே வந்தான் ,
"உடனே அரண்மணை வைத்தியரை அழைத்து வரச்சொல் " ஆணையிட்டார் அரசர்
வைத்தியரும் வந்துப்பார்த்தார் மருந்தும் கொடுத்தார் குணமாகவில்லை பின் பல வைத்தியர்கள்
குணமாக்க முயற்சி செய்தனர் ஒன்றும் பலனில்லை
அப்போது அங்கு ஒரு ரிஷி வந்தார் .
"மன்னா நீங்கள் எப்போதும் ஒரே வர்ணத்தைப்பார்த்தபடி இந்த அறையில் இருக்க தலைவலி அதிகமாகும் நீங்கள் பச்சை வர்ணம் இருக்குமிடத்தில் செல்லுங்கள் அந்த நிறத்தைக்கவனியுங்கள்
பச்சை நிறம் கண்களுக்குக் குளிர்ச்சி,,"இதைத்தெரிவித்தபடியே ரிஷி நகர்ந்தார்
மன்னன் எல்லா இடத்தையும் பச்சை நிறமாக மாற்றச்செய்தான் அதே போல் வர்ணம் பூசுபவர்கள்
எல்லா இடத்தையும் பச்சை வர்ணத்தால் பூசி வைத்தனர்
சிலநாட்கள் கழித்து ரிஷி திரும்ப மன்னரைப்பார்க்க வந்தார்
வர்ணம் பூசுபவர்கள் ரிஷியைச்சூழ்ந்துக்கொண்டு "உங்களுக்கும் பச்சை வரணம் பூச வேண்டும் அப்போதுதான் எங்கள் மன்னரைப்பார்க்க் முடியும் எங்கள் மன்னர் எல்லாவற்றையும் பசுமையாகத்தான்
பார்க்க விரும்புவார் " என்றனர்
ரிஷி அவர்களிடம் " நான் உள்ளே போய் மன்னரிடம் பேசிவிட்டு வந்து பிறகு இதைப்பற்றிச்சொல்கிறேன்"
என்றுச்சொல்லிவிட்டு ராஜாவைக்காணச்சென்றார் ,
"மன்னரே நீங்கள் எத்தனைப்பெரிய முட்டாள் எல்லாவற்றையும் பச்சைஆக்க செல்வத்தை வாரிறைத்து
இப்படி நஷ்டமாக்கி இருக்கிறீரே:உங்கள் பார்வையை மாற்றினாலே போதுமானதே!"
"பார்வையை எப்படி மாற்றிக்கொள்வது முனிவரே"?
"ஒரு பச்சை வண்ணக்கண்ணாடியைபணிந்தால் அத்தனையும் பச்சையாகத்தெரியாதா என்ன?
இதற்கு இவ்வளவு சில்வு செய்ய வேண்டுமா?
அரசனுக்குப்பதில் சொல்லத்தெரியவில்லை வெட்கத்தினால் தலைக்குனிந்தான்
இதே போல் இந்த உலகைப்பார்க்கும் நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் இந்த உலகம்
முழுவதும் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் தான் ஆகையால் ஒவ்வொருவரும் நற்சிந்தனைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் {சாயிபாபா சொன்ன கதை }
No comments:
Post a Comment