இந்தக்கால சூழ்நிலையில் ஒருவர் சொன்ன இந்தக்கதையைச் சிந்திக்கத்தோன்றுகிறது
ஒரு கானகத்தில் ஒரு முனிவர் குடிசையில் வாழ்ந்து வந்தார் ,குருகுலம்
நடத்தி பல சிஷ்யர்களைச்சேர்த்துக்கொண்டார் எவ்வளவு
தூரம் தன் புகழ் பரவுகிறது என்று தினமும் நினைத்து அதில் மகிழ்ச்சியும்
அடைந்தார் ,தன் புகழுக்காகவும்
இதனால் வரும் செல்வத்தினாலும் அகமகிழ்ந்துப்போனார் புகழும் செல்வமும்
சேரச்சேர நற்சிந்தனைகள் மறைய ஆரம்பித்தன ஆசைகளின் வலையில் விழுந்தார்
இதே காட்டில் ஒரு வேடன் இருந்தான் . அவனை நம்பி ஒரு குடும்பம் இருந்தது
,அவனுக்குப்படிப்பறிவு
இல்லாததால் மிருகங்களை வேட்டையாடி அதில் தான் குடும்பத்தின் வயிறை
நிரப்பி வந்தான் வேட்டையாடுமுன்னும் அந்த இறைவனை நினைப்பான்
வேடையாடியப்பின்னும் அந்த இறைவனுக்கு மனதாலே அதைப்படைப்பான்
அவனுக்குக்கோயில் தெரியாது செய்யும் தொழில்தான் தெய்வம்
மனம் முழுதும் எப்போதுமே நற்சிந்தனை இருக்கும் பலருக்கு ஓடிச்சென்று உதவுவான் ,
காட்டில் சன்யாசியின் ஆஸ்ரமம் வருபவர்கள் அந்த வேடனைப்பார்த்து இப்படி
மிருகங்களைக்கொன்று இழிவான வாழ்க்கை வாழவேண்டுமா ?இது தேவையா ?என்று
ஏளனமாகச் சிரிப்பார்கள் ,ஆனால் அவன் ஒன்றும் கண்டுக்கொள்ளாமல் கடமையிலேயே
மனம் ஒன்றி செயல்ப்பட்டு வந்தான் , அவனால்அந்தப்பெரிய
குடும்பம் காக்கப்படவேண்டும் என்ற சிந்தனதான்
கால்ச்சக்கரம் சுழன்றது வேடனும் மரணமடைந்தான் சன்யாசியும் மரணத்தைத்தழுவினார்
வேடனின் உறவினர்கள் மனம் வருந்தி அழுது பின் கடவுள் சித்தம் அதுவே என்று
தங்கள் வேலைகளை
கவனிக்கத்தொடங்கினர்
சன்யாசியோ சொத்து பல சேர்த்து வைத்திருந்தார் அவரது திதியையும் பிரமாதமாக
சீடர்கள் கொண்டாடினர்
இருவரது ஆவியும் யமதர்ம ராஜனிடம் சென்றது முதலில் சன்யாசிக்கு
நரகதண்டனையைகொடுத்தார் யமராஜன்
பின் வேடனுக்கு சுவர்க்கத்தைக்கொடுத்தார் ,
சன்யாசியின் ஆவி பேசியது "யமதர்மராஜனே இது ஞாயமா ? இது பெரிய
அநீதி இல்லையா? துறவறமும், வேதத்தின் சாரமும் த்த்துவ உபதேசமும்
என்னை எப்போது சூழ புகழ் பெற்றேன் இதற்கா நரக தண்டனை ?
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் இன்னொரு கண்ணில் தேனுமாக பார்த்திருக்கிறீர்கள்.
அந்த வேடன் படிக்காத முட்டாள் மிருகங்களைக்கொன்று வயத்தை
வளர்ப்பவன் அவ்னுக்கு சுவர்கமா? இது நியாயமா?"
யமதர்மர் பதிலுரைத்தார் "துறவியே நீக்கள் புகழுக்கும் பணத்திற்கும்
ஆசைப்பட்டீர்கள் வெளியாரை ஈர்த்து புகழும் பெருமையும் சேர்க்கச்செய்த
செயலகள் இதில் உண்மையான இறைச்சக்தியை நீங்கள் எண்ணவில்லை இதில் பொறாமை
புகழ காமம் பெருமை என்ற பல வேண்டாத குணங்கள்
கலந்திருந்தன .
ஆனால் வேடனோ கடமை உணர்ச்சி மிக்கவனாகவும் தன் தொழிலையும்
ஒரு தெய்வப்பணியாகவே எண்ணி நடத்தி வந்தான் இவன் மனம் நேர்மையிலும்
தெய்வச்சிந்தனையிலும் எப்போதும் சென்றுக்கொண்டிருந்தது உடலால் புரியும்
செயலைவிட உள்ளத்தின்
சுத்தம் தான் முக்கியம் .இதனால் உங்களை விட அந்த வேடன் உயர்ந்தவனாகிறான்
அதனால் தண்டனை சரியே" என்றார்
சன்யாசியும் மனம் தெளிந்தார் ,
உள்ளம் சுத்தமாக இருப்பது மிக மிக முக்கியம் . இதனால்தான்
அகத்தூய்மை என்றும் அகத்தாய்வு என்றும் தியானத்தில் அடிக்கடி
சொல்லப்படுகிறது ,
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment