Wednesday, May 19, 2010

என்று மகளிர் தினம்?

என்று மகளிர் தினம்?


மகளிர் செல்லட்டும் இரவினிலே
மனப்பயமின்றி சுதந்திரமாய் தனிமையிலே,
நெஞ்சில் கலக்கம் இல்லாமல்,,,,,,,
அன்றுதான் நம்க்கு "மகளிர் தினம்'

பெண் சிசு அழிக்கும் நிலைப் போகட்டும்
ஆண்களின் சர்வாதிகாரம் ஒழியட்டும்
சமநிலைப் பாங்கு தோன்றட்டும்
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம்

கற்புநிலை இருவருக்கும் ஒன்றே
உணர்வுகளும் மதிப்பும் ஒன்றே
என்று இந்த ஏற்றத்தாழ்வு மாறுமோ,?
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம் "


தாயும் ஆகிறாள் காதலியும் ஆகிறாள்
விண்வெளியிலும் பறக்கிறாள்
அதிகாரியாகவும் ஆகிறாள்,
விளையாட்டிலும் முன் நிற்கிறாள்

எத்துறையிலும் திறமை
அதுவே நமக்குப் பெருமை
அடக்கம் அவ்ளுக்குத் தேவை
ஆனால் அடிமைநோக்கு ஏன் ?

மகனைக் காணத் துடிக்கும் தாய்
இருப்பதோ முதியோர் இல்லம்
என்று இந்நிலை மாறுமோ?
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம்

மாட்டுப்பொங்கல் போல் ஒருநாள்.
மாலைப் போட்டு வர்ணம் பூசி
வயிறு புடைக்க்த் தீனி வைத்தால்
மாட்டின் உழைப்புத்தான் மாறுமா ?
அதன் உண்மை நிலை மறந்து போகுமா?



எங்கும் வண்ணங்கள் எங்கும் உற்சாகம்

ஹோலி ,,இந்தப்,பெயரைக் கேட்டாலே வண்ணங்களும் பிச்காரி என்ற த்ண்ணீர்
பீச்சும் குழாயகளும், வண்ணப்பொடிகளும் கறுப்பு பெயின் டும்
ஒருவர்கொருவர் அன்புடன் தழுவலும் தான் ஞாபகம் வருகிறது ம்ஹராஷ்ட்ராவில்
இது மிகப் பிரமாதமாகக்
கொண்டாடுவார்கள் அதை ரங்க பஞ்சமி என்பார்கள்,,வசந்தக்காலத்தின்
நுழைவு நாள் இது சிவராத்திரியுடன் "சிவசிவா "என்று குளிர் போய்ப் பின்
வசந்த காலம் அழகுடன் பூக்களுடன் அழகாகக்கோலமிடும்,
,,இதில் செம்படவர்கள் அதிகம் பங்கேற்று தங்களை மறந்துக் களிப்பார்கள்
எல்லோரும் ஒவ்வொரு நடு சந்தியிலும் மேலே சுமார் 6அல்ல்து ஏழுமாடி
உயரத்தில் ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம் ரூபாயகள் வசூல் செய்து மேலே
தனியாகக்கட்டிவிடுவர்கள் இதேப்போல் தான் ஜன்மாஷ்டமியன்றும் நடக்கும்,
பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும் இதை உடைக்க ஒரு "டோலி"என்ற குமபல் வரும்
அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும் . பாட்டு பாடிக்கொண்டு "கோவிந்தா
ஆலா ரே என்று கொட்டு கொட்டிக்கொண்டும் வருவதைப் பார்த்தால் நம் உடலும்
சிலிர்க்கும்
பின் ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டு முக்கோணம் போல் மேலே ஏறி அதை
எட்டிப் பிடித்து உடைப்பார்கள் அவர்களை ஏற்விடாமல் த்ண்ணீர் அவர்கள்
மேல் கொட்டுவதும் உண்டு
,,அவர்கள் சாமர்த்தியமாக எடுத்தால் அந்த
ரூபாய்கள் அவர்களுக்கே ,,,,

ஜீஜா பாய் லக்கூஜிஜாதவ் மஹராஜின் பெண்,,அவள் தன் ஐந்து வயதில்
விளையாட்டாக எல்லோர் மேலேயும் வண்ணக் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்க
சிறு பையன் "சாஹூஜி 'மேல் பட்டுவிட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே
தன் மகனுக்கும் ஜீஜாபாயிற்கும்
திருமணம் நிச்சியம் செய்து விட்டார் பின் சில காலம்ம்கழித்துத் திருமணம்
நடைப்பெற பின் வீர சிவாஜி பிறந்தார்
மஹராஷ்டாராவும் பிறந்தது இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரண்மாகிறது
பிரஹ்லாதனை எப்போதும் நராயணா என்றே சொல்ல அவந்து தந்தை
ஹிரண்யகசிபு கோபத்தின் உச்சிக்குச்சென்றுவிட்டான் ஆகையால் அவனைக்கொல்ல
பலவிதமாக முயன்றான் மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டான் யானைக்காலால
மிதிக்கும்படி செய்தான் ஆனாலும் நாராய்ணன பிர்ஹ்லாதனைக்காப்பாற்றி
விட்டார் இதனால் ஹோலிகா என்ற சகோதரியை அழைத்து அக்னி மூட்டி அதன்
நடுவில் பிர்ஹ்லாதனை மடியில் வைத்துகொள்ள அழைத்தாள் ஹோலிகா .
பிரஹ்லாதன் அதன்படியே செய்தான் அவன் வாய் மட்டும் நாராயணா என்று சொன்னபடி
இருக்க ஹோலிகா மடியில் அமர்ந்தான் ஹோலிகா நெருப்பும் தன்னைப்பாதிக்காமல்
இருக்கும் வரம் பெற்றிருந்தாள்
அனால் அந்த நாராயணா என்ற நாமம் பிரஹ்லாதனைக்காப்பாற்றிவிட்டது
ஆனால் ஹோலிகா அக்னியில் மடிந்தாள் இதனால் சோட்டி ஹோலி என்ற நாளில்
வடக்கில் பல குச்சிகள் கட்டைகள் சேர்த்து மலைப்போல் குவித்து
அதை எரிப்பார்கள்
இந்த நாளில் தான் சிவபெருமானால் மன்மதனும் எரிக்கப்பட்டான் ஆகையால்
மன்மத தகனம் என்றும் சில மாகாணங்களில் கொண்டாடுகின்றனர் தமிழ் நாட்டிலும்
மன்மத தகனம் கொண்டாடி கூத்து என்ற பெயரில் இரவில் நாடகம் நடத்துவார்கள்

காமதகனத்தைக்குறித்து தமிழ் நாட்டிலும் சில இடங்fகளில் கொண்டாடப்படுகின்றன ,

மதுரா பிருந்தாவன் ,,,இங்கு ஹோலி ராதா கிருஷ்ண பாவத்துடன்
கொண்டாடப்படுகிறது
ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்துக் கண்ணன் தன் அம்மா ய்சோதையிடம் சென்று"அம்மா
நான் மட்டும் ஏன் கருப்பு ராதா மட்டும் ஏன் இவ்வள்வு சிவப்பு என்கிறார்
..யசோதைக்கு
பதில் சொல்லத்தெரியவில்லை அப்போது கிருஷ்ணர் ஒரு கருப்பு வர்ணம் குழைத்து
ராதாவின் அழ்கியமுகத்தில் பூசி அவளையும் கருப்பாக்கினாராம் ,இது
ராதாவின் எண்ணம்
ஆக இருந்ததாம் அதை அவர் அறிந்து இந்த மாதிரி விளையாடினார் என்கிறார்கள் .
அதனால் அங்கு ஹோலி கலர் ஒருவருக்கொருவர் முகத்தில் பூச ராஸலீலா என்ற
நடனமும் ஆடுகிறார்கள் பிஹாரி என்ற க்விஞர் ஹிந்தியில் இது பற்றி கவிதை
எழுதி
இருக்கிறார் மிகவும் மட்டமாக ஹோலி களிப்பது பிஹாரில் தான் ,தண்ணீருக்கு
பதில் சாணம்
கரைத்து ஊற்றுவார்கள் பஸ்ஸின் சன்னலினுள் சாணி உருண்டையும் வீசி எறிவார்கள்
நான் ஒரு தடவை "கயா "போன போது தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது
வெளியில் நடந்தால் சாணம்கரைத்து தலையிலும் விடுவார்கள்
சிலர் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று பெண்களின் மேல் நீரைக்கொட்டி
பின் கலரைக் கைக்குவந்த இடத்தில் கன்னத்தில் தடவிவிடுவார்கள்.
அன்று போலீஸும் ஒன்றும் செய்யமுடிவதில்லை தவிர "பாங்"என்ற சரக்கு வேறு
{ஊமத்தம்பூவின் சாரோ } உள்ளே போயிருக்கும் ,

ஜெய சிவசங்கர் என்ற ஹிந்தி சினிமாப்பாடல் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது நான்
தில்லியில் ஹோலியின் போது கதவை அடைத்தபடி
உள்ளே உட்க்கார்ந்தாலும் தபதப என்று ஒரு பட்டாளமே உள்ளே வந்துவிடும் ஐயோ
எனக்குக்கலர் அலர்ஜி என்று அலர பின் போவார்கள்

எல்லோருக்கும் என் ஹோலி வாழ்த்துக்கள் அன்பைக் கொடுப்போம் அன்பினை வளர்ப்போம்

யார் உயர்ந்தவர்?

இந்தக்கால சூழ்நிலையில் ஒருவர் சொன்ன இந்தக்கதையைச் சிந்திக்கத்தோன்றுகிறது
ஒரு கானகத்தில் ஒரு முனிவர் குடிசையில் வாழ்ந்து வந்தார் ,குருகுலம்
நடத்தி பல சிஷ்யர்களைச்சேர்த்துக்கொண்டார் எவ்வளவு
தூரம் தன் புகழ் பரவுகிறது என்று தினமும் நினைத்து அதில் மகிழ்ச்சியும்
அடைந்தார் ,தன் புகழுக்காகவும்
இதனால் வரும் செல்வத்தினாலும் அகமகிழ்ந்துப்போனார் புகழும் செல்வமும்
சேரச்சேர நற்சிந்தனைகள் மறைய ஆரம்பித்தன ஆசைகளின் வலையில் விழுந்தார்

இதே காட்டில் ஒரு வேடன் இருந்தான் . அவனை நம்பி ஒரு குடும்பம் இருந்தது
,அவனுக்குப்படிப்பறிவு
இல்லாததால் மிருகங்களை வேட்டையாடி அதில் தான் குடும்பத்தின் வயிறை
நிரப்பி வந்தான் வேட்டையாடுமுன்னும் அந்த இறைவனை நினைப்பான்
வேடையாடியப்பின்னும் அந்த இறைவனுக்கு மனதாலே அதைப்படைப்பான்
அவனுக்குக்கோயில் தெரியாது செய்யும் தொழில்தான் தெய்வம்
மனம் முழுதும் எப்போதுமே நற்சிந்தனை இருக்கும் பலருக்கு ஓடிச்சென்று உதவுவான் ,

காட்டில் சன்யாசியின் ஆஸ்ரமம் வருபவர்கள் அந்த வேடனைப்பார்த்து இப்படி
மிருகங்களைக்கொன்று இழிவான வாழ்க்கை வாழவேண்டுமா ?இது தேவையா ?என்று
ஏளனமாகச் சிரிப்பார்கள் ,ஆனால் அவன் ஒன்றும் கண்டுக்கொள்ளாமல் கடமையிலேயே
மனம் ஒன்றி செயல்ப்பட்டு வந்தான் , அவனால்அந்தப்பெரிய
குடும்பம் காக்கப்படவேண்டும் என்ற சிந்தனதான்


கால்ச்சக்கரம் சுழன்றது வேடனும் மரணமடைந்தான் சன்யாசியும் மரணத்தைத்தழுவினார்
வேடனின் உறவினர்கள் மனம் வருந்தி அழுது பின் கடவுள் சித்தம் அதுவே என்று
தங்கள் வேலைகளை
கவனிக்கத்தொடங்கினர்
சன்யாசியோ சொத்து பல சேர்த்து வைத்திருந்தார் அவரது திதியையும் பிரமாதமாக
சீடர்கள் கொண்டாடினர்

இருவரது ஆவியும் யமதர்ம ராஜனிடம் சென்றது முதலில் சன்யாசிக்கு
நரகதண்டனையைகொடுத்தார் யமராஜன்
பின் வேடனுக்கு சுவர்க்கத்தைக்கொடுத்தார் ,
சன்யாசியின் ஆவி பேசியது "யமதர்மராஜனே இது ஞாயமா ? இது பெரிய
அநீதி இல்லையா? துறவறமும், வேதத்தின் சாரமும் த்த்துவ உபதேசமும்
என்னை எப்போது சூழ புகழ் பெற்றேன் இதற்கா நரக தண்டனை ?
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் இன்னொரு கண்ணில் தேனுமாக பார்த்திருக்கிறீர்கள்.
அந்த வேடன் படிக்காத முட்டாள் மிருகங்களைக்கொன்று வயத்தை
வளர்ப்பவன் அவ்னுக்கு சுவர்கமா? இது நியாயமா?"

யமதர்மர் பதிலுரைத்தார் "துறவியே நீக்கள் புகழுக்கும் பணத்திற்கும்
ஆசைப்பட்டீர்கள் வெளியாரை ஈர்த்து புகழும் பெருமையும் சேர்க்கச்செய்த
செயலகள் இதில் உண்மையான இறைச்சக்தியை நீங்கள் எண்ணவில்லை இதில் பொறாமை
புகழ காமம் பெருமை என்ற பல வேண்டாத குணங்கள்
கலந்திருந்தன .
ஆனால் வேடனோ கடமை உணர்ச்சி மிக்கவனாகவும் தன் தொழிலையும்
ஒரு தெய்வப்பணியாகவே எண்ணி நடத்தி வந்தான் இவன் மனம் நேர்மையிலும்
தெய்வச்சிந்தனையிலும் எப்போதும் சென்றுக்கொண்டிருந்தது உடலால் புரியும்
செயலைவிட உள்ளத்தின்
சுத்தம் தான் முக்கியம் .இதனால் உங்களை விட அந்த வேடன் உயர்ந்தவனாகிறான்
அதனால் தண்டனை சரியே" என்றார்

சன்யாசியும் மனம் தெளிந்தார் ,
உள்ளம் சுத்தமாக இருப்பது மிக மிக முக்கியம் . இதனால்தான்
அகத்தூய்மை என்றும் அகத்தாய்வு என்றும் தியானத்தில் அடிக்கடி
சொல்லப்படுகிறது ,

பார்வையில் கோளாறு

"அப்பப்பா ரொம்ப தலைவலி ,,,,யார் அங்கே ,? சேவகனை உள்ளே வரச்சொல் " தலைவலியுடன் கத்தினார் அந்த அரசர் .
சேவகனும் உள்ளே வந்தான் ,
"உடனே அரண்மணை வைத்தியரை அழைத்து வரச்சொல் " ஆணையிட்டார் அரசர்
வைத்தியரும் வந்துப்பார்த்தார் மருந்தும் கொடுத்தார் குணமாகவில்லை பின் பல வைத்தியர்கள்
குணமாக்க முயற்சி செய்தனர் ஒன்றும் பலனில்லை
அப்போது அங்கு ஒரு ரிஷி வந்தார் .
"மன்னா நீங்கள் எப்போதும் ஒரே வர்ணத்தைப்பார்த்தபடி இந்த அறையில் இருக்க தலைவலி அதிகமாகும் நீங்கள் பச்சை வர்ணம் இருக்குமிடத்தில் செல்லுங்கள் அந்த நிறத்தைக்கவனியுங்கள்
பச்சை நிறம் கண்களுக்குக் குளிர்ச்சி,,"இதைத்தெரிவித்தபடியே ரிஷி நகர்ந்தார்
மன்னன் எல்லா இடத்தையும் பச்சை நிறமாக மாற்றச்செய்தான் அதே போல் வர்ணம் பூசுபவர்கள்
எல்லா இடத்தையும் பச்சை வர்ணத்தால் பூசி வைத்தனர்
சிலநாட்கள் கழித்து ரிஷி திரும்ப மன்னரைப்பார்க்க வந்தார்
வர்ணம் பூசுபவர்கள் ரிஷியைச்சூழ்ந்துக்கொண்டு "உங்களுக்கும் பச்சை வரணம் பூச வேண்டும் அப்போதுதான் எங்கள் மன்னரைப்பார்க்க் முடியும் எங்கள் மன்னர் எல்லாவற்றையும் பசுமையாகத்தான்
பார்க்க விரும்புவார் " என்றனர்
ரிஷி அவர்களிடம் " நான் உள்ளே போய் மன்னரிடம் பேசிவிட்டு வந்து பிறகு இதைப்பற்றிச்சொல்கிறேன்"
என்றுச்சொல்லிவிட்டு ராஜாவைக்காணச்சென்றார் ,
"மன்னரே நீங்கள் எத்தனைப்பெரிய முட்டாள் எல்லாவற்றையும் பச்சைஆக்க செல்வத்தை வாரிறைத்து
இப்படி நஷ்டமாக்கி இருக்கிறீரே:உங்கள் பார்வையை மாற்றினாலே போதுமானதே!"
"பார்வையை எப்படி மாற்றிக்கொள்வது முனிவரே"?
"ஒரு பச்சை வண்ணக்கண்ணாடியைபணிந்தால் அத்தனையும் பச்சையாகத்தெரியாதா என்ன?
இதற்கு இவ்வளவு சில்வு செய்ய வேண்டுமா?
அரசனுக்குப்பதில் சொல்லத்தெரியவில்லை வெட்கத்தினால் தலைக்குனிந்தான்
இதே போல் இந்த உலகைப்பார்க்கும் நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் இந்த உலகம்
முழுவதும் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் தான் ஆகையால் ஒவ்வொருவரும் நற்சிந்தனைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் {சாயிபாபா சொன்ன கதை }