அன்பெனும் வாசலை மூடாதே .
பின் ஆண்டவன் வாசலும் மூடிவிடும்
உலகெக்கெல்லாம் அது ஆதாரம்
அதில்லாமல் வாழ்க்கை சேதாரம் ,
அன்பெனும் இலக்கில் கப்பல் விடு
வாழ்க்கைக்கடல் கடக்கும், கவலைவிடு.
அன்பு என்ற எழுது கோல் பிடி
படைப்புக்கள் அதைக்கொண்டு வடி .
இன்பக்கேணி சுரக்கட்டும்
பகை ஓடி மறையட்டும்
மனித நேயம் வளரட்டும்
சாதிமதபேதம் ஒழியட்டும்
இன்றைய காலம் ,
தவிக்கும் காலம்
பல மாற்றங்கள் காணும் காலம்
அன்பு மறைந்துப்போன காலம்
சத்தியம் ஒளிந்துக்கொண்ட காலம்
சுயநலமே தங்கும் காலம்
அன்பு நெறியை மறந்த காலம்
பிழைகள் பல மலிந்த காலம்
ஆனாலும் மனம் கலங்காதே
என்று மாறுமோ என்று வருந்தாதே
அன்பெனும் மாத்திரை சிறந்த மருந்து.
மன்னிப்போம் தவறை மனம் திறந்து
இறைவன் தாளைப்பணிவோம் என்றும்,
அவனருளில் தஞ்சமடைவோம் ,,,,,,.
Saturday, March 20, 2010
தெலுங்கு கன்னட அன்பர்களுக்கு வரும் வருடபிறப்புடன் மராட்டியருக்கும் சிந்தி பேசுபவருக்கும் இதே நாளில் வருடபிறப்பு வருகிறது மராட்டியர்கள் இதை குடிபட்வா என சொல்கின்றனர் ,புராணக்கதைபடி பிரும்மா பூமியைச்சிருஷ்டித்த தினம். என்கிறார்கள் இவர்கள் அத்துடன் தசாவதாரத்தில் மத்ஸ்ய அவதாரமாக எடுத்த நாள் இது என்றும் சொல்கிறார்கள் . ஒரு கலசம் போன்ற பித்தளை அல்லது செம்புபாத்திரத்தை எடுத்து அதில் ஸ்வஸ்திக் போன்று சிவப்பு கலரில் வரைந்து பின் ஒரு பட்டுத்துணியில் சுற்றி ஒரு கம்பில் கவிழ்த்து வைப்பது மராட்டியர்களின் வழக்கம் இதனால் சுபீக்ஷம் வருவதாகவும் வெற்றி கிடைப்பதாகவும் ஒரு நம்பிக்கை ,இன்றைய தினத்தில் தான் சிவாஜி மகராஜ் போரில் மகத்தான வெற்றி பெற்று திரும்பினாராம் நாம் செய்வது போல் இவர்களும் "பஞ்சாங்க சிரவணம் "செய்கிறார்கள் பட்வா என்பது சம்ஸ்கிருத மொழியிலிருந்து வந்தது தான்யம் என்று பெயர் " விவசாயிகள் தான்யங்களை அறுவடைச்செய்ய ஆரம்பிப்பார்கள் மஹாராஷ்டிராவில் மே மாதத்திலிருந்தே மழை ஆரம்பித்து செப்டம்பர் வரை இருக்கும் நாம் செய்வது போலவே இவர்களும் வெல்லப்போளி செய்கின்றனர் இதை பூரன்போளி என்கின்ற்னர் பின் பச்சடியும் உண்டு அறுசுவைகல்ந்த ஒரு பச்சடி வேப்பம்பூ வெல்லம் மாங்காய் புளி பச்சைமிளைகாய் உப்பு என்று எல்லாம் கலந்த பச்சடி உண்டு வாழ்க்கையில் இதுபோல் பல வநதாலும் எல்லாம் சமபாவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் பச்சடி இது தெலுங்கு கன்னடக்காரர்களும் இது போல் தித்திப்பு போளியும் பச்சடியும் செய்கின்றனர் இப்போது வருவோம் சிந்திநதிக்கு ,,,,,, "சேத்தி சாந்த ஜ்யோ லக்லக் வதாயும் அதவ " இது சிந்திகளின் வாழ்த்து " தோஹான் கெ பீ " {உங்களுக்கும் }" வாழ்த்துக்கு பதில் இவர்களது பூஜை கொஞ்சம் வித்த்யாசமாக இருக்கிறது சப்ரிமலை போகும் பக்தர்கள் 40 விரதம் வைப்பதுப்போல் இவர்களும் வைத்துக்கொள்கின்றனர் சிந்து நதியில் குளித்து ஒரே உடையைத்துவைத்து பின் காயவைத்துக்கட்டுகின்றனர் ,தாடி வளர்க்கின்றனர் சோப்பு எண்ணெய் தேப்பதில்லை இவர்களின் இஷ்ட தெய்வம் "ஜூலேலால " இவர்கள் தண்ணீரைப்பூஜிக்கின்றனர் வருணபகவானைப்பூஜிக்கின்றனர் தங்களுக்கு நிம்மதி மனசாந்தி பின் அந்த இறைசக்க்தியின் அருளும் கிடைக்க வேண்டிக்கொள்கின்றனர் இந்த விரதம் முடித்தப்பின் நன்றி தெரிவிக்கும் நாள் என்றும் கொண்டாடுகின்றனர் , அன்று விள்கேற்றி சர்க்கரை மிட்டாய் எடுத்து பின் கலசத்தில் ஏலக்காய் சேர்த்து தேங்காயுடன் விளக்கேற்றி அந்த ஜோதியுடன் வலம் வந்து அவர்களின் கடவுளையும் கும்பிடுகின்றனர் பூஜ்ய ஜூலேலால் தேவ்தா வை கோஷ்மிட்டு ஜெய்ஜெய்காரம் எழுப்புகின்றனர் இன்றைய தினத்திலிருந்து வசந்த நவராத்த்ரி ஆரம்பிக்கிறது உத்தரபிரதேசத்தில் .தில்லியில் பலர் ஒன்பது நாட்களும் பட்டினி கிடந்து சக்தியைப்பூஜிப்பதைப்பார்த்திரு கன்னிகைகளுக்கு பூஜை செய்து வளைகள் அடுக்கி மருதாணி இட்டு பின் பூரியும் சொஜ்ஜிபோன்ற இனிப்பையும் வழ்ங்குவார்கள் நான் இருந்த பள்ளியில் பலர் இந்த விரதம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அந்தத்தேவியின் சக்தியோ என்னமோ அவர்களுக்குப்பசியேதெரியாது ஸ்ரீராமர் யுத்தத்தில் வெற்றி பெற சக்தியைப்பூஜித்தாராம் அதையே இந்த நாட்களில் ஜண்டேவாலா மாதா என்ற கோயில் சென்று சிற்ப்பாகக்கொண்டாடுகின்றனர் அத்துடன் மெஹ்ரோலி என்ற இடத்தில் இருக்கும் காத்யாயினி கோயிலும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் அந்தத்தேவியின் அழகைச்சொல்லமுடியாது 24 கைகள் எல்லாமே ஸ்வர்ண மயம் ,,,,,,, சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள் ,,,,என் கண் முன்னால் அவள் இன்றும் நிற்பது தெரிகிறது எல்லா அனப்ர்களுக்கும் குடிபட்வா வின் வாழ்த்துகள் ![]() ![]() ![]() ![]() ![]() |
பூக்களின் பாடம்
மலரே! பூக்கிறாய் ஒரு புன்னகை ,
அகமலர்ந்து மலருகிறாய் ,
வண்ணங்களை உதிர்க்கிறாய்,
மனம் விரிய மகிழ்விக்கிறாய்,
எட்டிப்பார்க்கும் வசந்தம்1
பூத்துக்குலுங்கும் ஆனந்தம்
நீ இல்லாமல் ஒரு கோயிலுமில்லை
உன் துணையில்லாமல் மண்ப்பெண்ணுமில்லை ,
பிறக்கும் போதும் வருகிறாய்
இறக்கும் போதும் அமருகிறாய்
நீ சொல்லாமல் சொல்வதை நான் உணர்ந்தேன்,
அதன் பொருளையும் நான் கண்டுக்கொண்டேன்
" போகும் வரை நீ மலர்ந்திரு
கள்ளமிலா மனம் திறந்திரு
தன்னலமற்ற சேவை
கடைசி வரை தேவை "
நீ கற்பிக்கும் பாடமிது
உன்னிடமுள்ள சிறப்புமிது,
அகமலர்ந்து மலருகிறாய் ,
வண்ணங்களை உதிர்க்கிறாய்,
மனம் விரிய மகிழ்விக்கிறாய்,
எட்டிப்பார்க்கும் வசந்தம்1
பூத்துக்குலுங்கும் ஆனந்தம்
நீ இல்லாமல் ஒரு கோயிலுமில்லை
உன் துணையில்லாமல் மண்ப்பெண்ணுமில்லை ,
பிறக்கும் போதும் வருகிறாய்
இறக்கும் போதும் அமருகிறாய்
நீ சொல்லாமல் சொல்வதை நான் உணர்ந்தேன்,
அதன் பொருளையும் நான் கண்டுக்கொண்டேன்
" போகும் வரை நீ மலர்ந்திரு
கள்ளமிலா மனம் திறந்திரு
தன்னலமற்ற சேவை
கடைசி வரை தேவை "
நீ கற்பிக்கும் பாடமிது
உன்னிடமுள்ள சிறப்புமிது,
Sunday, March 14, 2010
மாசிக்கயிறு பாசிப்படரும்
காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான
ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும்
இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று
சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன்
வனத்திற்குச்சென்றாள்
அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு
சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன்
அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான் ,
அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள்,
மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன்
விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சமயம் "நாராயணா நாராயணா"
ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும்
இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று
சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன்
வனத்திற்குச்சென்றாள்
அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு
சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன்
அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான் ,
அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள்,
மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன்
விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சமயம் "நாராயணா நாராயணா"
நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன்
"சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும்
குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி
இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச்சத்த்ய்வானுக்குத்
திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,,மாளிகைவிட்டு வந்த சாவித்திரி
அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த
விரத்ததை மேற்கொண்டாள்
அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப்பொடியாக்கி அதில் காராமணியும்
சேர்த்து அடைப்போல் தட்டி
வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக
இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .
அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக
யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய
சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்
கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி
வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு
என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்
" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "
" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்
" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க
முடியும் "என்று பதிலுக்கு
சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்
சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன்
புருஷனை மீள வைத்தன ,
இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில்
கரவாசௌத் என்ற
பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை
முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து
பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் ,
பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே
"என்று சொல்லும்போது
இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்
நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "
மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று
சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்
என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க
என் கண்வன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " என்று
சொல்லியபடியே சரட்டை அணிந்துக்கொள்வார் அதே போல் எங்களையும்
அணியச்சொல்வார்
" அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்றால் " எங்கேயாவது
பிறந்திருப்பானே"
என்று முடிப்பார்
எனக்கு ஒரு ச்ந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "?
இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால கற்புக்கரசியினால்
இது சாத்தியமாகும்
என்றார் ,,,
எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று
நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும்
அலசப்பட்டுவிட்டது
"சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும்
குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி
இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச்சத்த்ய்வானுக்குத்
திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,,மாளிகைவிட்டு வந்த சாவித்திரி
அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த
விரத்ததை மேற்கொண்டாள்
அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப்பொடியாக்கி அதில் காராமணியும்
சேர்த்து அடைப்போல் தட்டி
வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக
இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .
அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக
யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய
சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்
கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி
வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு
என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்
" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "
" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்
" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க
முடியும் "என்று பதிலுக்கு
சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்
சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன்
புருஷனை மீள வைத்தன ,
இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில்
கரவாசௌத் என்ற
பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை
முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து
பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் ,
பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே
"என்று சொல்லும்போது
இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்
நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "
மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று
சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்
என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க
என் கண்வன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " என்று
சொல்லியபடியே சரட்டை அணிந்துக்கொள்வார் அதே போல் எங்களையும்
அணியச்சொல்வார்
" அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்றால் " எங்கேயாவது
பிறந்திருப்பானே"
என்று முடிப்பார்
எனக்கு ஒரு ச்ந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "?
இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால கற்புக்கரசியினால்
இது சாத்தியமாகும்
என்றார் ,,,
எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று
நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும்
அலசப்பட்டுவிட்டது
காமாட்சி அம்மன் விரதம்
மாசி மாதம் முடிவு பங்குனி மாதம் தொடக்கத்தில் காரடை நோம்பு வருகிறது
பெண்மணிகள் தங்கள் கணவர் சுக
க்ஷேமத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தித்து விரதம் நோற்பது
வழக்கம் இதன் பிண்ணனியில் சாவித்திரி
சத்தியவானின் கதை வருகிறது தன் மன உறுதியினாலும் கற்பினாலும்
யமனிடமிருந்து தன் புருஷன் சத்தியவானை இறந்தப்பின்னும்
உயிர்பிழைக்கச்செய்யும் உத்தமியின் கதை இந்த விரதம் ஏற்று இந்தக்கதையும்
படிக்க பெண்களுக்கு "சர்வமங்கள மாங்கல்யே "என்றஸ்லோகத்திற்கேற்ப
வாழ்க்கை அமைகிறது
இந்த விரதம் சாவித்திரி செய்தது இதன் ஆரமபம் பார்வதி தேவியினால் ஏற்பட்டது
கயிலைமலையில் பரமேஸ்வரன் தியானத்தில் இருக்க பார்வதி விளையாட்டிற்காக
தன் பஞ்சுக்கரத்தினால்
மென்மையாக சிவனாரின் கண்களைப்பொத்தினாள். இந்த விளையாட்டு எததனை விபரீதமானது !
ஈஸ்வரனின் கண்கள் மறைய உலகமே இருண்டது எல்லா சீவராசிகளும் த்வித்தன ,
கோபம் வராமல் இருக்குமா? முக்கண்ணனாருக்குக் கோபம் வந்துவிட்டது ,
"பார்வதி என்ன காரியம் செய்தாய் ?உன்னால் உலகமே இருண்டுப்போய் விட்டதே !
இதன் பிராயச்சித்தமாக
நீ பூலோகத்தில் பிறந்து தவம் இருக்கக் கட்டளை இட்டார்
பார்வதி தேவியும் மாங்காட்டில் காமட்சியாக ஒரு ஊசிமேல் நின்று தவமிருந்து
பின் காஞ்சிபுரத்திற்குச்செல்கிறார். பின் கம்பா நதியின் கரையில் அந்த
மணலைக்கொண்டு சிவலிங்கம் செய்து பூஜை செய்து வருகிறாள் ஒரு நாள் கமபா
நதியில் வெள்ளம் பெருகெடுத்து ஓடிவர தன் மண்ல் லிங்கம்
சேதமாகாமல் இருக்க தன் இரு கைகளாலும் அதை மறைத்து சிவபெருமானிடம் மனமுருக
வேண்டுகிறாள்
உடனே வெள்ளம் இரு பிரிவுகளாகப்பிரிந்துச்செல்ல பரமேஸ்வரனும் காட்சி
அளித்து அவளைத்தன்னுடன்
சேர்த்துக்கொள்கிறார் ,இதுவே தான் காமாட்சி விரதம் இந்தவிரதத்தைதான்
சாவித்திரி கடைப்பிடித்து
யமனையும் வென்றாள் ,பிரசாதமாக காரடையும் வெண்ணையும் வைத்ததால் அதுவே தொடர்ந்து
இன்றும் செய்யப்படுகிறது ,இன்று சிவராத்திரியில் அதுவும் சனிப்பிரதோஷமும்
சேர அம்மனின் இந்த விரதம்
அனுஷ்டிக்க மிகவும் விசேஷமான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைத்தான்
இன்று சாவித்திரி சத்திய்வான கதைப்படித்தாலும் நல்ல பலன் ,,
ஸ்ரீ அரவிந்தர் தன் சாவித்திரி காவ்யத்தில் இந்தக்கதையை நம் உடலுடனும்
ஆன்மாவுடனும் ஒப்பிட்டு
சைத்தனய சக்தியின் வெளிப்பாடே எமனுடன் போராடிபெற்ற வெற்றி என்கிறார் ,பல
போராட்டங்கள்
உலகில் இருக்கும் மாயை ஆசாபாசங்கள் என்று கருதப்படுகிறது அவர் அதை
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிரார்
புரியாமலே படித்தாலும் அதன் பலன் உண்டு என்றும் கருதப்படுகிறது
ஒருவருக்குப்பக்கவாதம் வந்து
பல வைத்தியங்கள் பார்த்தப்பின்னர் மனமொடிந்து பின் சாவித்திரி காவ்யம்
படித்தார் இரவில்
அவர் காலருகில் அன்னை வெள்ளைப்புடவையுடன் வந்து அவரது கட்டிலில் அமர்ந்து
அவரது காலை
வருடினார் பின் மறைந்துப்போனார் மறுநாள் அவர் நடந்ததைப்பார்த்து
டாக்டர்கள் எல்லாருமே வியந்தனர்
இதை நான் நேரில் பாதிக்கப்பட்டவ்ர் பேசியத்தைக்கேட்டேன் ,,அந்தக்கூட்டம்
"சாவித்திரி" யின் மகிமை
பற்றியது ஸ்ரீகர்மயோகியின் மகன் திரு அசோகன் வந்திருந்தார் ,
நேரம் கிடைக்க ஒரு பக்கமாவது சாவித்திரியப்படிக்கலாமே ! பெண்மணிகளுக்கு
காரடை நோம்பின்
நல்வாழ்த்துகள்
அன்புடன்விசாலம்
பெண்மணிகள் தங்கள் கணவர் சுக
க்ஷேமத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தித்து விரதம் நோற்பது
வழக்கம் இதன் பிண்ணனியில் சாவித்திரி
சத்தியவானின் கதை வருகிறது தன் மன உறுதியினாலும் கற்பினாலும்
யமனிடமிருந்து தன் புருஷன் சத்தியவானை இறந்தப்பின்னும்
உயிர்பிழைக்கச்செய்யும் உத்தமியின் கதை இந்த விரதம் ஏற்று இந்தக்கதையும்
படிக்க பெண்களுக்கு "சர்வமங்கள மாங்கல்யே "என்றஸ்லோகத்திற்கேற்ப
வாழ்க்கை அமைகிறது
இந்த விரதம் சாவித்திரி செய்தது இதன் ஆரமபம் பார்வதி தேவியினால் ஏற்பட்டது
கயிலைமலையில் பரமேஸ்வரன் தியானத்தில் இருக்க பார்வதி விளையாட்டிற்காக
தன் பஞ்சுக்கரத்தினால்
மென்மையாக சிவனாரின் கண்களைப்பொத்தினாள். இந்த விளையாட்டு எததனை விபரீதமானது !
ஈஸ்வரனின் கண்கள் மறைய உலகமே இருண்டது எல்லா சீவராசிகளும் த்வித்தன ,
கோபம் வராமல் இருக்குமா? முக்கண்ணனாருக்குக் கோபம் வந்துவிட்டது ,
"பார்வதி என்ன காரியம் செய்தாய் ?உன்னால் உலகமே இருண்டுப்போய் விட்டதே !
இதன் பிராயச்சித்தமாக
நீ பூலோகத்தில் பிறந்து தவம் இருக்கக் கட்டளை இட்டார்
பார்வதி தேவியும் மாங்காட்டில் காமட்சியாக ஒரு ஊசிமேல் நின்று தவமிருந்து
பின் காஞ்சிபுரத்திற்குச்செல்கிறார். பின் கம்பா நதியின் கரையில் அந்த
மணலைக்கொண்டு சிவலிங்கம் செய்து பூஜை செய்து வருகிறாள் ஒரு நாள் கமபா
நதியில் வெள்ளம் பெருகெடுத்து ஓடிவர தன் மண்ல் லிங்கம்
சேதமாகாமல் இருக்க தன் இரு கைகளாலும் அதை மறைத்து சிவபெருமானிடம் மனமுருக
வேண்டுகிறாள்
உடனே வெள்ளம் இரு பிரிவுகளாகப்பிரிந்துச்செல்ல பரமேஸ்வரனும் காட்சி
அளித்து அவளைத்தன்னுடன்
சேர்த்துக்கொள்கிறார் ,இதுவே தான் காமாட்சி விரதம் இந்தவிரதத்தைதான்
சாவித்திரி கடைப்பிடித்து
யமனையும் வென்றாள் ,பிரசாதமாக காரடையும் வெண்ணையும் வைத்ததால் அதுவே தொடர்ந்து
இன்றும் செய்யப்படுகிறது ,இன்று சிவராத்திரியில் அதுவும் சனிப்பிரதோஷமும்
சேர அம்மனின் இந்த விரதம்
அனுஷ்டிக்க மிகவும் விசேஷமான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைத்தான்
இன்று சாவித்திரி சத்திய்வான கதைப்படித்தாலும் நல்ல பலன் ,,
ஸ்ரீ அரவிந்தர் தன் சாவித்திரி காவ்யத்தில் இந்தக்கதையை நம் உடலுடனும்
ஆன்மாவுடனும் ஒப்பிட்டு
சைத்தனய சக்தியின் வெளிப்பாடே எமனுடன் போராடிபெற்ற வெற்றி என்கிறார் ,பல
போராட்டங்கள்
உலகில் இருக்கும் மாயை ஆசாபாசங்கள் என்று கருதப்படுகிறது அவர் அதை
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிரார்
புரியாமலே படித்தாலும் அதன் பலன் உண்டு என்றும் கருதப்படுகிறது
ஒருவருக்குப்பக்கவாதம் வந்து
பல வைத்தியங்கள் பார்த்தப்பின்னர் மனமொடிந்து பின் சாவித்திரி காவ்யம்
படித்தார் இரவில்
அவர் காலருகில் அன்னை வெள்ளைப்புடவையுடன் வந்து அவரது கட்டிலில் அமர்ந்து
அவரது காலை
வருடினார் பின் மறைந்துப்போனார் மறுநாள் அவர் நடந்ததைப்பார்த்து
டாக்டர்கள் எல்லாருமே வியந்தனர்
இதை நான் நேரில் பாதிக்கப்பட்டவ்ர் பேசியத்தைக்கேட்டேன் ,,அந்தக்கூட்டம்
"சாவித்திரி" யின் மகிமை
பற்றியது ஸ்ரீகர்மயோகியின் மகன் திரு அசோகன் வந்திருந்தார் ,
நேரம் கிடைக்க ஒரு பக்கமாவது சாவித்திரியப்படிக்கலாமே ! பெண்மணிகளுக்கு
காரடை நோம்பின்
நல்வாழ்த்துகள்
அன்புடன்விசாலம்
ஆண்டவன் வாசல் திற்க்கட்டும்
அன்பெனும் வாசலை மூடாதே .
பின் ஆண்டவன் வாசலும் மூடிவிடும்
உலகெக்கெல்லாம் அது ஆதாரம்
அதில்லாமல் வாழ்க்கை சேதாரம் ,
அன்பெனும் இலக்கில் கப்பல் விடு
வாழ்க்கைக்கடல் கடக்கும், கவலைவிடு.
அன்பு என்ற எழுது கோல் பிடி
படைப்புக்கள் அதைக்கொண்டு வடி .
இன்பக்கேணி சுரக்கட்டும்
பகை ஓடி மறையட்டும்
மனித நேயம் வளரட்டும்
சாதிமதபேதம் ஒழியட்டும்
இன்றைய காலம் ,
தவிக்கும் காலம்
பல மாற்றங்கள் காணும் காலம்
அன்பு மறைந்துப்போன காலம்
சத்தியம் ஒளிந்துக்கொண்ட காலம்
சுயநலமே தங்கும் காலம்
அன்பு நெறியை மறந்தக் காலம்
பிழைகள் பல மலிந்தக்காலம்
ஆனாலும் மனம் கலங்காதே
என்று மாறுமோ என்று வருந்தாதே
அன்பெனும் மாத்திரை சிறந்த மருந்து.
மன்னிப்போம் தவறை மனம் திறந்து
இறைவன் தாளைப்பணிவோம் என்றும்,
அவனருளில் தஞ்சமடைவோம் ,,,,,,.
பின் ஆண்டவன் வாசலும் மூடிவிடும்
உலகெக்கெல்லாம் அது ஆதாரம்
அதில்லாமல் வாழ்க்கை சேதாரம் ,
அன்பெனும் இலக்கில் கப்பல் விடு
வாழ்க்கைக்கடல் கடக்கும், கவலைவிடு.
அன்பு என்ற எழுது கோல் பிடி
படைப்புக்கள் அதைக்கொண்டு வடி .
இன்பக்கேணி சுரக்கட்டும்
பகை ஓடி மறையட்டும்
மனித நேயம் வளரட்டும்
சாதிமதபேதம் ஒழியட்டும்
இன்றைய காலம் ,
தவிக்கும் காலம்
பல மாற்றங்கள் காணும் காலம்
அன்பு மறைந்துப்போன காலம்
சத்தியம் ஒளிந்துக்கொண்ட காலம்
சுயநலமே தங்கும் காலம்
அன்பு நெறியை மறந்தக் காலம்
பிழைகள் பல மலிந்தக்காலம்
ஆனாலும் மனம் கலங்காதே
என்று மாறுமோ என்று வருந்தாதே
அன்பெனும் மாத்திரை சிறந்த மருந்து.
மன்னிப்போம் தவறை மனம் திறந்து
இறைவன் தாளைப்பணிவோம் என்றும்,
அவனருளில் தஞ்சமடைவோம் ,,,,,,.
Subscribe to:
Comments (Atom)
