Friday, January 22, 2010
பீஷ்மாஷ்டமி
ஓடி வந்தேன் உனைக்காண
,நீ கண்டுக்கொள்ளாதது ஏன் ?
உன் முகத்தில் ஒரு புன்னகை,
எப்போதுமே அது இயற்கை,
உன் அழகில் மயங்கி நின்றேன்
நீயோ க்வனிக்காமல் இருப்பதேன்?
ஒரு கை திரையை மூடுகிறது
அது என்னை வாட்டுகிறது ,
அசையாமல் நிற்கிறேன்
,உன் திசையைப்பார்த்து நிற்கிறேன்,
என்னை ஏன் இப்படிப் படுத்துகிறாய்,?
மனக்கஷ்டம் கொடுக்கிறாய்?
என்றும் நீ என் மனதில் தானே!
நான் வருவதும் உன்னைக்காணத்தானே !
பல நிமிடங்கள் போனது
திரையும் விலகியது ,
ஆஹா என்ன அழகு அவள்!
என் மீனாட்சித்தாய் அவள்.
அலங்காரத்தில் மின்னுகிறாள்.
அருள் பார்வை வீசுகிறாள்
மந்திரங்களின் முழக்கம்
நம் கலாச்சாரப்பழக்கம்
கற்பூர ஒளியில் அவள் முகம்
காணக்கிடைக்காதத்திருமுகம்
என்கண்களால் அவளைக்காண்கிறேன்.
அணுஅணுவாய் அவளை ரசிக்கிறேன் ,
என் கண்கள் திறந்து என்ன பயன் ?
என் அகக்கண்கள் அல்லவா திறக்கவேண்டும் !
என்னைக்கவர்ந்த ஜி என் பி
Thursday, January 21, 2010
என்னைக்கவர்ந்த ஜி.என் பி
இவர் தமிழ் ,சம்ஸ்கிருதம் தெலுங்கு போன்ற மொழிகளில் இயற்றிருக்கிறார்இவர்இயற்றிய பாடல்களைக்கச்சேரியில் பாடினதில்லையாம் எல்லாம் இவரதுசிஷ்யர்கள் தான் பாடிப்பரப்பினார்கள். இத்தனைச்சிறப்புப்பெற்றிருந்தாலும்துளிக்கூட கர்வமில்லாமல் எல்லோரிடமும் அன்புட்ன் பழகி பலருக்கு பலஉதவிகளைச்செய்வார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர் ,தவிரசினிமாவிலும்{பாமாவிஜயம் சகுந்தலை சதிஅனுசுயா ,உதயணன் வாசவதத்தை} நடித்திருக்கிறார்இவர் வடநாட்டிலும் பல ஹிந்துஸ்தானி பாடகர்களுடன் நட்புகொண்டு அவர்களின் ஹிந்துஸ்தானி ஸ்டைலையும் சில ராகத்தில் சேர்த்துபாடுவார் ,ப்டேகுலாம் அலி அவர்கள் இவருடைய பரம நண்பர் இவரது ரசிகர் இவரதுஹிந்தோளம்ஸாமஜவரகமனா" என்பதைக்கேட்டு தனது மால்கோசுடன்ஜுகல் பந்திப்போல் பாடுவாராம் இருவ்ரும் மூன்றுகாலங்களிலும்ஸ்வரங்கள் ராகாஅலாபனைப்போன்றவைகள் பாட கேட்டவர்கள்ஆனந்தத்தை அனுபவித்தனராம்இதேபோல் திரு பாலகந்தர்வா திரு பியாரிலால சாஹேப் போன்றவர்களும் இவரின்நண்பர்கள் ஆனார்கள் ,,ஒருதடவை இவர் டிஆர் மாலியின் புல்லாங்குழலைக்கேட்டப்பின்"என் பாட்டு இதன் முன் ஒன்றுமே இல்லை ,நல்லவேளையாக படிப்பு என் வசம்இருப்பதால் எதாவது வேலைத்தேடிக்கொள்வேன் என்று விளையாட்டாகச்சொல்லசெம்மங்குடி திரு ஸ்ரீனீன்வாசய்யர் அவர்களும்" ஆமாம் என்ன வாசிப்பு !நானும் என் நிலத்தைப்பார்த்துக்கொள்ளப்போய்விடுவேன் "என்றாராம்திரு ஜி என் பி எல்லோரையும் வாய்விட்டுப்புகழுவார் அவருக்குகொஞ்சம் கூட பொறாமையோ பேரசையோ இருந்ததில்லை ,இவர் முதல் கச்சேரி மைலாப்பூர் கோயிலில் நட்நதது ஒரு பெரிய பாட்கர்கச்சேரி பாட வரமுடியாத நிலையில் இருந்ததால் இவரைப்பாடச்சொன்னார்களாம்அன்றையக்கச்சேரியிலிருந்துஅவர் மேலே உயர்ந்துக்கொண்டே போனார் ,இவரது பாடும் விதம்,,,,,,,, தன்க்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டுபிருக்காக்களுடன் டெம்போ குன்றாமல்அப்படியே கடைசிவரை நீடிக்கும் ,,,,,குரலும் கணீரென்று இருக்கும்கீழ்ப்பஞ்சமும் மேல்பஞ்மும் மிகவும் எளிதாகத்தோட்டு நிற்கும்ஒரு தட்டிலிலேயே 16 ஸ்வரங்கள் மேலேயே பிருகாவுடன் போகமுடியும்,இவரது கல்பனா ஸ்வரம் மிகவும் அருமை
சண்டவரிசையின் பிரயோகங்கள் வரும் ,சிலகீர்த்தனைகளுக்குசிட்டஸ்வரங்கள் இய்ற்றியிருக்கிறார் ,இவரது வாசுதேவயனி பாடலும் அந்த கலயாணி ராகமும்மறக்கமுடியாது அதேபோல் ரஞ்சனி நிரஞ்சனி என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையும்வசந்தபைரவி யில் நீதயராதாவும் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது,இவரது செல்வங்கள் இந்த இசைக்கலையில் முன்னுக்கு வரவில்லை .எனநினைக்கிறேன் ஆனால் இவரது சிஷ்யர்கள்புகழ்பெற்ற எம் எல்வி என்ற வசந்தகுமாரிதிரு திருச்சூர் ராமசந்திரன் திருமதி ராதா திருமதி ஜெயலட்சுமிதஞ்சாவூர் திரு கல்யாணராமன் திருமதி பூஷணி கல்யாண்ராமன்திரு டிஎஸ்பாலசுப்பிரமண்யன் மிகவும் உன்னதநிலையைஅடைந்திருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது ,இவர்பெற்ற உயர்ந்த பதவிகள் ஆஸ்தான வித்துவான் திருவனந்தபுரம்ஆஸ்தான வித்துவான் எட்டயப்புரம்சங்கீதகலாநிதி , பிரசிடண்ட் அவார்டு {டாக்டர் எஸ் ராதாகிருஷணன்அவர்களால் வழங்கப்பட்டது }ஆல் இந்தியா ரேடியோவில் deputy chief producer , principalof swathithirunal collegeஇவரைப்பெற்ற புண்ணிய தம்பதிகள் திரு ஜிவி நாராயணஸ்வாமிதிருமதி விசாலாக்ஷிஇவரது குரு திரு குருஸ்வாமி பாகவதர் மதுரை சுப்பிரமண்யர்எத்தனைக்காலம் ஆனாலும் இவரது இசை எல்லோர் மனதிலும்ஒரு பரவ்சத்தை அளிக்கும் என்பது உண்மை இந்த இசை மகானைத்தலை வணங்குகிறேன்
ஏழுசை வள்ளல்
அந்த மாணவன் தன் வீட்டிலிருந்து கபில நதி வழியாகச்சென்றுகொண்டிருந்தான் நடுவில் நின்று தன் காபிநோட்டை எடுத்துப்பார்த்தான்,அந்த நேரம் அவனது ஆசிரியர் அங்கு வந்தார் ," என்ன இங்கு நின்று என்ன செய்கிறாய் ? உனக்குத்தான் படிப்பு வரவில்லையே! கொண்டா அதை ,"என்றபடி அவனது நோட்டைகிழித்து நதியில் வீசி எறிந்தார்"போ உன் வீடு திரும்பிப்போ உனக்குத்தான் சங்கீதம் நன்னா வரதேஅதைப்பிடிச்சுக்கோ இன்மேல் பள்ளிக்கு வராதே "ஸ்கூலுக்குக்போனமகன் உம்மென்ற முகத்துடன் திரும்பி வந்தான் ,அவன் அம்மாவிஷயம் அறிந்தாள் ,அவரே பெரியஇசை மேதை தான் ,அவனை பக்கண்ணா என்ற ஒன்றுவிட்ட சகோதரரிடம் இசைப்பயிலஅனுப்பிவைத்தார் ,குறுகிய காலத்துக்குள்ளேயே அந்த மாண்வன் எங்கேயோ போய்விட்டான் ,,,எங்கேதன்னையும் மிஞ்சிவிடப்போறானே என்ற எண்ணத்தினால் குறுகிய மனப்பான்மையுடன்ஒரு ஜோசியரை வரவழைத்தார் ,அந்த ஜோசியர் அஹோபிலமட பண்டித் ,,,அவரும் வந்தார் சினிமாவில் வருவதுப்போல் கையைப்பார்த்துவிட்டு "இந்தப்பையனுக்கு இசையே வராது வந்தாலும் முன்னுக்கு வரமுடியாதபடிகிரகங்கள் இருக்கே" என்றார்இதுதான் இந்த மாண்வனின் வெற்றிக்கு முதல் படி ,எப்படியும்உச்சியை எட்டிவிடவேண்டும் என்று மனதிலே வீம்பு கொண்டார்தன் மாமாவின் உதவியால் பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் இசைப்பயிலகுருகுலமாகச்சேர்ந்தார் , அவரது 16 வயத்லிருந்து ஆரம்பித்து சுமார் 21வருடங்கள் வெற்றிபடிகளிலேயேஏறினார் பட்டங்கள் குவிந்தன ,,முதன் முறையாக ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடித்து தன் லட்சியத்தை அடைந்தார்,இப்போது தெரிந்திருக்கும் இவர் யாரென்று ?.........வயலின் மேதை மைசூர் திரு சௌடையா தான் இவர் ,இவர் சாதகத்தைச்சொல்லிமுடியாது ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அசுர சாதகம்செய்வாராம் தவிர பிராணயாமம் யோகாதியானம் உடற்பயிற்சி குருசேவை என்று பலவற்றில் ஈடுபடுவார் ,இவர் தினமும் அதிக பயிற்சி செய்வது சரளிவரசை சண்டவரிசை அலங்காரம்,,,,,,,,அதனால் அஸ்திவாரம் மிகவும்பலமாக இருந்தது ஆரம்பத்தில் ஒரு கச்சேரியில் இவரது கைப்பிசற கொஞ்சம்
அபஸ்வரம் கேடக குரு அந்த இடத்திலேயேகன்னத்தில் அறைந்துவிட்டாராம் ,இவரது வயலினில் சுருதி பிசகாமல் இருக்க ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடிக்கும் எண்ணம் கொண்டார்தன் குருவின் ஆசிகளுடன் சப்தஸ்வர தேவதைகள் ஆசிகளுடன் மைசூர் ரங்கப்பாஉதவியுடன் ஏழு தந்திகள் கொண்ட வயலின் இவர் கைகளில் ஏறி தோளைஅலங்கரித்தது ,இந்த வயலின் மேதையைபெற்ற தம்பதிகள் திரு அகஸ்தியகௌடா திருமதி சுந்தரம்மாஇவர் எல்லா பிரபல வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்மதுரை மணிஅய்யர் , மகராஜபுரம் அவர்கள்ஆலத்தூர் பிரதர்ஸ் செம்மங்குடி ,அரியக்குடி செம்பை ,,என்ற பலர் இதில் இடம் பெறுவர்தவிர இவர் சொந்த சாஹித்யமும் இயற்றிருக்கிறார் ,இவர் வாங்கிய அவார்டுகள் பட்டங்கள் பலசங்கீத மணி , வாத்ய ரத்னாகரா ,, ஏழிசை வள்ளல்தந்திரி விலாஸ் இன்னிசை நாதமணி நாத சுதார்ணாசங்கீத சூடாமணி கலைமாமணி நாதயோகீஸ்வராசுஸ்வர் சுகலய சங்கீதா நாதக்கனல் வயலின் கலாநிதி சங்கீத சுதா பிரவாஹா மதுரை கலாபிரவீண்சங்கீத கலாநிதி ,,,,,,
இவர் பெயரில் சௌடையா மெமோரியல் ஹால் என்று 1980ல் வயலின் உருவத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டதுசுமார் ஆயிரம் பேர் அமரலாம் இன்றும் அங்குப்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன்அங்கு ஒரு தெருவின் பெயர் சௌடையா தெரு எனச்சூட்டப்படிருக்கிறதுசங்கீத ரதன சௌடையா ம்யூசிக் அவார்டு கொடுக்கப்டுகிறதுஇவர்து பிரதமசிஷ்யர் வி சேதுரமய்யா அவர்கள் இவரது மற்றொரு சிஷ்யர் ராமரத்னம் சங்கீத கலாரத்னா மைசூர் இசைக்கல்லூரியில்முதல்வர்.
இவர் திருமகூடலூவில் 1895ல் பிறந்தார் 19 ஜனவரி 1967ல்மறைந்தார்இந்தக்கட்டுரை எழுத மூலகாரணம் ரேடியோவில் அவர்து இசைக் கேட்டது தான் தோடியில் ஏராநாபை வர்ணம் ,,,எனக்கு,,,,,அவரது ஞாபகங்கள்:வரிசையாக வந்தன ,,,,,,,அந்த இசைஞானிக்கு என் வந்தனம்