Friday, January 22, 2010

பீஷ்மாஷ்டமி

நாட்டு நலனுக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையில்பிரும்மசாரி விரதம் கடைப்பிடித்து தன் தந்தைக்காக திருமண எண்ணமே இல்லாமல் அரசையும் துறந்தபெரிய மகான் , ..உலகத்தில் சாதரணமாக எல்லோருமே இறக்கும் போது மகன்அருகில் இருக்க அவன் கையால் தகனம் கிடைக்கும்பாக்கியம் வேண்டும் என்று எண்ணுவர் ,தவிர அந்தப்பிள்ளை வழியாகச்செய்யும்கர்மாவும் போகும் வழிக்குப்புண்ணியம் சேர்க்கும் என்ற கொள்கையுடன்இருப்பது நமது ஹிந்து மதம்,இதனால் தானோ ஆண் மகன் பிறக்க பலர் வேண்டுகிறார்கள்.சர்தார்ஜி குடும்பத்தில் ஆண் மகன் பிறக்க லோஹ்ரி என்றபண்டிகையை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள் ,அதாவது நமதுபோகிப்பண்டிகையின் போது அவர்களது லோஹ்ரி சிலர் இதை லோடி என்பார்கள் இதுவே பெண்குழந்தையாக இருந்தால் அத்தனைவிமரிசையாக நடத்தமாட்டார்கள்.சர்தார்ஜிகுடும்பத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்ப்பு இருந்ததால்நான் இதை அறிவேன் ,பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி அந்த மகானின் நினைவாக அர்க்கியம்விடுவது வழக்கம் மாக மாதம் என்றுசொல்லும் தை 12லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம்செய்வது வழக்கம் ,பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக்கொண்டுபீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறதுமகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியதுபீஷ்மர் கௌரவப்படைக்குத்தலைமையேற்றார் அர்சுனன் அம்புகள்அவர் உடல் முழுவதும் துளைத்தன ஆனாலும் தனக்கு அப்போதுமரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்றவரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப்பிடித்தபடி 58 நாட்கள்உயிரோடு கிடந்தார் அவருக்கென்றுஅம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்சுனன் ,அவரது தாய் கங்கா தேவி அவருக்குத்தாக சாந்தி செய்யபூமியின் அடியில் போய் பாதாள கங்கையாக மேலே பீய்ச்சடித்துஅவர் தாக்த்தைத் தீர்த்தாள் தாயல்லவா ,,,,மகன் இந்த நிலையில் இருக்கஎப்படிச்சகிப்பாள்?தட்சியாயணம் என்பது தேவர்களுக்கு இரவு ,பீஷ்மர் இந்தக்கால்த்தில்மரணத்தைத் தழுவ விரும்பவில்லை தேவர்கள்விழித்து வரும் நாளான உத்த்ராயணக்காலம் வரை அம்புபடுக்கையில் இருந்தார் அந்த நேரத்தில் தான் தருமருக்குஅறங்கள் பற்றி உபதேசித்தார் , இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்ததுஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் "இவர் இந்த மாதிரி பிறந்து பிரும்மசாரியாக வாழ்ந்த காரணம்என்ன ?பிரும்மலோகத்திற்கு ஒரு முறை கங்கை சென்றாள் ,அந்த நேரத்தில் மன்னன்மஹாபிஷக் கங்கையின் அழகில் மயங்கி மோகம் கொண்டான் ,பிரும்மா இதைக்கண்டுஇருவரையும் பூமியில் பிறக்க சபித்தார் இந்த மஹாபிஷக் தான்சந்தனுவாகப்பிறந்தார்வ்சிஷ்ட முனிவரிடம் காமதேனு பசு இருந்தது கேட்டதெல்லாம்கொடுக்கும் பசு ,,,, அனலன் அணிலன்ஆபத்சலன் சோமன் தரன், த்ருவன், பித்யூஷன், பிரபாசன்,என்பவர்கள் அஷ்ட வசுக்கள் என வழங்கப்பட்டனர் அதில்பிரபாசனின் மனைவி தன் தோழிக்காக காமதேனுவின்பாலைக்கேட்க அஷ்ட வசுக்கள் அதைத்திருட முற்பட்டனர் ,ஆனால் வசிஷ்டர் இதை அறிந்து பூமியில் பிறக்கஇவர்களுக்குச்சாபம் கொடுத்தார் ,பிரகாசனால்தான் இந்த ஏற்பாடு நடந்ததால் அவன் மனைவி சொல் கேட்டு குற்றம்புரிய நினைத்தால் அவனுக்கு திருமணஇன்பம் என்பதே இல்லாமல் போக வேண்டும் என்று சபித்தார்அஷ்ட வசுக்கள் கங்கையிடம் வந்து தாங்கள் அவளுக்கு மகன்களாகப்பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர் ,இதை நிறைவேற்ற கங்கை அஸ்தினாபுரத்து மன்னன் பிரதீபனைக்கண்டு மயங்கி தன்னை அவர்து வலது தொடையில் அமர்த்திமனைவிஸ்தான்ம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டாள் ,ஆனால் பிரதிபனோ வலது தொடைமகளுக்கு உரியது ஆதலால் அவளை ஏற்ற்க்கொள்ள இயலாது என்றார் பின்னர் தன்மகன் சந்தனுவுக்குமனைவியாகும்படி அனுப்பி வைத்தார் ,கங்கையும் ஒரு நிபந்தனை போட்டது எல்லோருக்கும் தெரியும்தான் செய்யும் எந்தச்செயலைப்பற்றியும் கேட்கவோ கோபித்துக்கொள்ளவோகண்டுக்கொள்ளவோ கூடாது என்பதேநிபந்தனைவரிசையாக ஆண்குழந்தைகள் ஏழையும் பிறந்த் உடனேயே கங்கை ஆற்றில் வீசினாள்இவர்கள் தான் அந்த ஏழு வசுக்கள்எட்டாவது பிறந்தது ,சந்தனுவுக்கு மனது கேட்கவில்லைஅவள் ஆற்றில் போட வந்த போது சந்தனு தடுத்தார் அவ்வளவுதான் கங்கை இனிசந்தனுவுடன் இருக்க முடியாது என்றும் குழந்தையைத்தான் வளர்த்து சரியானநேரத்தில் கொண்டு தருவதாகவும் சொல்லிச்சென்றுவிட்டாள் இந்த எட்டாவது மகன் தான் அஷ்ட வசுக்களில் பிரபாசன் என்பவன் ,கங்கைமகனானதால் காங்கேயன் ,தேவவிரதன் என்ற பெயரில் அஸ்தினாபுரத்தில் பின் வந்தார்மனைவியைப்பிரிந்ததால் சந்தனு செம்படவன் மகள்சத்தியவதியைக் கண்டு மோகித்து அவளது தந்தையிடம் பெண் கேட்டார் ,அவரோசத்தியவதியின் பிள்ளைகளே அரசபதவி அடைய வேண்டும் என்று கட்டளை இட்டார்இதனால் மனம் கலங்கி சந்தனு வரவே தன் தந்தையின் கலக்கத்தை தேவவிரதன்அறிந்து தான் நைஷ்டிகபிரும்மசாரியாக இருக்கப்போவதாக்வும் தனக்குராஜ்யபதவி வேண்டாம் என்றும் எந்தப்பெண்ணையும்மனதால் கூட நினைக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்தார் ,அஸ்தினாபுர வாரிசு ஒரே மகன் அரசகுமாரன் தன் தந்தையின்சந்தோஷத்திற்காக மணவாழ்க்கை அரசபதவி இரணடையும்துறந்ததைப்பார்த்து தேவர்கள் மலர்கள் சொரிந்தனர் "பீஷ்ம "என்று வாழ்த்தினர்இதைக்கண்டு மனம் நெகிழ்ந்து சந்தனு இரண்டு வரம் அளித்தார்எப்போது தேவவிரதன் மரணத்தை விரும்புகிறானோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும்பீஷ்மர் மகாவீரர் உத்தமர் சத்தியசீலர் எல்லாகலைகளையும்கற்றவர் ,தாய் தந்தையை தெய்வமாகப்போற்றி வணங்கியவர் ,கடைசிவரை பிரும்மசாரியாகவே இருந்தார் இத்தனைச்சிறப்பு பெற்ற அவருக்கு பீஷ்மாஷ்டமி அன்று அர்க்கியம் விடபாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை .அத்துடன் சந்ததியர்கள் சிறப்பாக வாழ்வார்களாம்

ஓடி வந்தேன் உனைக்காண

உன்னைக்காண ஓடி வந்தேன்
,நீ கண்டுக்கொள்ளாதது ஏன் ?
உன் முகத்தில் ஒரு புன்னகை,
எப்போதுமே அது இயற்கை,
உன் அழகில் மயங்கி நின்றேன்
நீயோ க்வனிக்காமல் இருப்பதேன்?
ஒரு கை திரையை மூடுகிறது
அது என்னை வாட்டுகிறது ,
அசையாமல் நிற்கிறேன்
,உன் திசையைப்பார்த்து நிற்கிறேன்,
என்னை ஏன் இப்படிப் படுத்துகிறாய்,?
மனக்கஷ்டம் கொடுக்கிறாய்?
என்றும் நீ என் மனதில் தானே!
நான் வருவதும் உன்னைக்காணத்தானே !
பல நிமிடங்கள் போனது
திரையும் விலகியது ,
ஆஹா என்ன அழகு அவள்!
என் மீனாட்சித்தாய் அவள்.
அலங்காரத்தில் மின்னுகிறாள்.
அருள் பார்வை வீசுகிறாள்
மந்திரங்களின் முழக்கம்
நம் கலாச்சாரப்பழக்கம்
கற்பூர ஒளியில் அவள் முகம்
காணக்கிடைக்காதத்திருமுகம்
என்கண்களால் அவளைக்காண்கிறேன்.
அணுஅணுவாய் அவளை ரசிக்கிறேன் ,
என் கண்கள் திறந்து என்ன பயன் ?
என் அகக்கண்கள் அல்லவா திறக்கவேண்டும் !

என்னைக்கவர்ந்த ஜி என் பி

பம்பாய் ஷண்முகானந்தசபாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன் .அன்றுநடக்கப்போகும் கச்சேரி திரு ஜி.என் பிஎன்ற பாலசுப்பிரமண்யம் அவர்கள். அதோ வந்து மேடைமீது அமருகிறார் எப்போதுமே சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவார் வெள்ளை வெளேரென்ற ஜிப்பா , வேஷ்டியுடன் காதிலும் பளீரென்ற கடுக்கன் மின்ன முகத்தில் ஒரு தேஜஸ் நெற்றியில் அழகான பொட்டு ,ஆங்கிலத்தில்ஹேண்ட்ஸம் என்று சொல்வார்களே அது இவருக்கு மிகப்பொருந்தும் .தீர்க்கமானஎடுப்பான நாசி , நல்ல அகலமான நெற்றி . .சுருதியுடன் "ஸா,,,"என்றுசேர்த்துக்கொள்ள சபை களைக்கட்டுகிறது ஒரு சரிகைஅங்கவஸ்தரம் இருந்தாற்போல் ஞாபகம் ,சுருதியைப்பலதடவைச்சரிப்பார்க்கிறார் ,பின் ஆரம்பமாகிறது கச்சேரி"வலசி வாச்சி யு னா ,,,என்ற நவாவர்ணம் கேதாரத்தில் ஆரம்பித்து,"பின்பேகடா கலயாணி என்று பலராகங்கள் தொடர மிக அருமையான வர்ணம் ,,,, பின் யோசனாஎன்ற தர்பார் ராகக்கீர்த்தனை தொடர்ந்தது ,பின் காம்போஜி விஸ்தாரமாகப்பாடதொடர்ந்து வந்தது நளினகாந்தி ,,பல வருடங்கள் ஆனாலும் அந்தக்கச்சேரி என்மனதில் பதிந்து இருக்கிறது கடைசியில் பாடிய "சொன்னதைச்செய்திட"என்றபாடலும் சிந்தை அறிந்து வாடி ",பிருகுமுகுந்தேகி ரஸனே "சிந்துபைரவியில்ஹிந்துஸ்தானி பஜன் போல் ஒரு பாடலும் மிக அருமையாக இருந்தன"திக்குத்தெரியாதகாட்டில்"பாடலைத்தான் மற்க்கமுடியுமா? ,அவரது கம்பீரமான தோற்றம் அவரது அருமையான குரல் பிருகாக்கள் கொண்ட ராகங்கள்தன்க்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்ட விதம் எல்லாம்என் மனதில் இன்றும் அப்படியே பசுமையாக நிற்கிறதுஅவருக்குப்பிடித்த ராகங்கள் தோடி, கலயாணி , பஹுதாரிஆந்தோளிகா ,ஆனந்தபைரவி பெஹாக் போன்ற ராகங்கள்என நினைக்கிறேன் ,படிப்பிலும் இவர் BA{Hons} தவிர கலைகளில் இயல் இசை நாடகம் என்றுமூன்றிலும் ஈடுபட்டு சாதனைப்புரிந்தார்இவர் இயற்றிய புதிய ராகங்கள் பாடலகள் இன்றும் பாடப்படுகின்றன. உம்சிவசக்தி அம்ருதபெஹாக் சோமகாதம்பரி ,இவர் பாடல்கள் பல அம்பாளை ஆராதிப்பதாக இருந்தன ஸ்ரீராஜராஜேஸ்வரியே இஷ்ட தெய்வம் என கேள்விப்பட்டேன் ,.தவிரஇவர் தமிழ் ,சம்ஸ்கிருதம் தெலுங்கு போன்ற மொழிகளில் இயற்றிருக்கிறார் இவர் இயற்றிய பாடல்களைக்கச்சேரியில் பாடினதில்லையாம் எல்லாம் இவரதுசிஷ்யர்கள் தான் பாடிப்பரப்பினார்கள். இத்தனைச்சிறப்புப்பெற்றிருந்தாலும்துளிக்கூட கர்வமில்லாமல் எல்லோரிடமும் அன்புட்ன் பழகி பலருக்கு பலஉதவிகளைச்செய்வார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர் ,தவிரசினிமாவிலும்{பாமாவிஜயம் சகுந்தலை சதிஅனுசுயா ,உதயணன் வாசவதத்தை} நடித்திருக்கிறார்இவர் வடநாட்டிலும் பல ஹிந்துஸ்தானி பாடகர்களுடன் நட்புகொண்டு அவர்களின் ஹிந்துஸ்தானி ஸ்டைலையும் சில ராகத்தில் சேர்த்துபாடுவார் ,ப்டேகுலாம் அலி அவர்கள் இவருடைய பரம நண்பர் இவரது ரசிகர் இவரதுஹிந்தோளம்ஸாமஜவரகமனா" என்பதைக்கேட்டு தனது மால்கோசுடன்ஜுகல் பந்திப்போல் பாடுவாராம் இருவ்ரும் மூன்றுகாலங்களிலும்ஸ்வரங்கள் ராகாஅலாபனைப்போன்றவைகள் பாட கேட்டவர்கள்ஆனந்தத்தை அனுபவித்தனராம்இதேபோல் திரு பாலகந்தர்வா திரு பியாரிலால சாஹேப் போன்றவர்களும் இவரின்நண்பர்கள் ஆனார்கள் ,,ஒருதடவை இவர் டிஆர் மாலியின் புல்லாங்குழலைக்கேட்டப்பின்"என் பாட்டு இதன் முன் ஒன்றுமே இல்லை ,நல்லவேளையாக படிப்பு என் வசம்இருப்பதால் எதாவது வேலைத்தேடிக்கொள்வேன் என்று விளையாட்டாகச்சொல்லசெம்மங்குடி திரு ஸ்ரீனீன்வாசய்யர் அவர்களும்" ஆமாம் என்ன வாசிப்பு !நானும் என் நிலத்தைப்பார்த்துக்கொள்ளப்போய்விடுவேன் "என்றாராம்திரு ஜி என் பி எல்லோரையும் வாய்விட்டுப்புகழுவார் அவருக்குகொஞ்சம் கூட பொறாமையோ பேரசையோ இருந்ததில்லை ,இவர் முதல் கச்சேரி மைலாப்பூர் கோயிலில் நட்நதது ஒரு பெரிய பாட்கர்கச்சேரி பாட வரமுடியாத நிலையில் இருந்ததால் இவரைப்பாடச்சொன்னார்களாம்அன்றையக்கச்சேரியிலிருந்துஅவர் மேலே உயர்ந்துக்கொண்டே போனார் ,இவரது பாடும் விதம்,,,,,,,, தன்க்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டுபிருக்காக்களுடன் டெம்போ குன்றாமல்அப்படியே கடைசிவரை நீடிக்கும் ,,,,,குரலும் கணீரென்று இருக்கும்கீழ்ப்பஞ்சமும் மேல்பஞ்மும் மிகவும் எளிதாகத்தோட்டு நிற்கும்ஒரு தட்டிலிலேயே 16 ஸ்வரங்கள் மேலேயே பிருகாவுடன் போகமுடியும்,இவரது கல்பனா ஸ்வரம் மிகவும் அருமைசண்டவரிசையின் பிரயோகங்கள் வரும் ,சிலகீர்த்தனைகளுக்குசிட்டஸ்வரங்கள் இய்ற்றியிருக்கிறார் ,இவரது வாசுதேவயனி பாடலும் அந்த கலயாணி ராகமும்மறக்கமுடியாது அதேபோல் ரஞ்சனி நிரஞ்சனி என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையும்வசந்தபைரவி யில் நீதயராதாவும் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது,இவரது செல்வங்கள் இந்த இசைக்கலையில் முன்னுக்கு வரவில்லை .எனநினைக்கிறேன் ஆனால் இவரது சிஷ்யர்கள்புகழ்பெற்ற எம் எல்வி என்ற வசந்தகுமாரிதிரு திருச்சூர் ராமசந்திரன் திருமதி ராதா திருமதி ஜெயலட்சுமிதஞ்சாவூர் திரு கல்யாணராமன் திருமதி பூஷணி கல்யாண்ராமன்திரு டிஎஸ்பாலசுப்பிரமண்யன் மிகவும் உன்னதநிலையைஅடைந்திருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது ,இவர்பெற்ற உயர்ந்த பதவிகள் ஆஸ்தான வித்துவான் திருவனந்தபுரம்ஆஸ்தான வித்துவான் எட்டயப்புரம்சங்கீதகலாநிதி , பிரசிடண்ட் அவார்டு {டாக்டர் எஸ் ராதாகிருஷணன்அவர்களால் வழங்கப்பட்டது }ஆல் இந்தியா ரேடியோவில் deputy chief producer , principalof swathithirunal collegeஇவரைப்பெற்ற புண்ணிய தம்பதிகள் திரு ஜிவி நாராயணஸ்வாமிதிருமதி விசாலாக்ஷிஇவரது குரு திரு குருஸ்வாமி பாகவதர் மதுரை சுப்பிரமண்யர்எத்தனைக்காலம் ஆனாலும் இவரது இசை எல்லோர் மனதிலும்ஒரு பரவ்சத்தை அளிக்கும் என்பது உண்மை இந்த இசை மகானைத்தலை வணங்குகிறேன்

Thursday, January 21, 2010

என்னைக்கவர்ந்த ஜி.என் பி

பம்பாய் ஷண்முகானந்தசபாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன் .அன்றுநடக்கப்போகும் கச்சேரி திரு ஜி.என் பிஎன்ற பாலசுப்பிரமண்யம் அவர்கள். அதோ வந்து மேடைமீது அமருகிறார்எப்போதுமே சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவார் வெள்ளை வெளேரென்ற ஜிப்பா , வேஷ்டியுடன் காதிலும் பளீரென்ற கடுக்கன்மின்ன முகத்தில் ஒரு தேஜஸ் நெற்றியில் அழகான பொட்டு ,ஆங்கிலத்தில்ஹேண்ட்ஸம் என்று சொல்வார்களே அது இவருக்கு மிகப்பொருந்தும் .தீர்க்கமானஎடுப்பான நாசி , நல்ல அகலமான நெற்றி . .சுருதியுடன் "ஸா,,,"என்றுசேர்த்துக்கொள்ள சபை களைக்கட்டுகிறது ஒரு சரிகைஅங்கவஸ்தரம் இருந்தாற்போல் ஞாபகம் ,சுருதியைப்பலதடவைச்சரிப்பார்க்கிறார் ,பின் ஆரம்பமாகிறது கச்சேரி"வலசி வாச்சி யு னா ,,,என்ற நவாவர்ணம் கேதாரத்தில் ஆரம்பித்து,"பின்பேகடா கலயாணி என்று பலராகங்கள் தொடர மிக அருமையான வர்ணம் ,,,, பின் யோசனாஎன்ற தர்பார் ராகக்கீர்த்தனை தொடர்ந்தது ,பின் காம்போஜி விஸ்தாரமாகப்பாடதொடர்ந்து வந்தது நளினகாந்தி ,,பல வருடங்கள் ஆனாலும் அந்தக்கச்சேரி என்மனதில் பதிந்து இருக்கிறது கடைசியில் பாடிய "சொன்னதைச்செய்திட"என்றபாடலும் சிந்தை அறிந்து வாடி ",பிருகுமுகுந்தேகி ரஸனே "சிந்துபைரவியில்ஹிந்துஸ்தானி பஜன் போல் ஒரு பாடலும் மிக அருமையாக இருந்தன"திக்குத்தெரியாதகாட்டில்"பாடலைத்தான் மற்க்கமுடியுமா? ,அவரது கம்பீரமான தோற்றம் அவரது அருமையான குரல் பிருகாக்கள் கொண்ட ராகங்கள்தன்க்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்ட விதம் எல்லாம்என் மனதில் இன்றும் அப்படியே பசுமையாக நிற்கிறதுஅவருக்குப்பிடித்த ராகங்கள் தோடி, கலயாணி , பஹுதாரிஆந்தோளிகா ,ஆனந்தபைரவி பெஹாக் போன்ற ராகங்கள்என நினைக்கிறேன் ,படிப்பிலும் இவர் BA{Hons} தவிர கலைகளில் இயல் இசை நாடகம் என்றுமூன்றிலும் ஈடுபட்டு சாதனைப்புரிந்தார் இவர் இயற்றிய புதிய ராகங்கள் பாடலகள் இன்றும் பாடப்படுகின்றன. உம்சிவசக்தி அம்ருதபெஹாக் சோமகாதம்பரி ,இவர் பாடல்கள் பல அம்பாளை ஆராதிப்பதாக இருந்தது ஸ்ரீராஜராஜேஸ்வரியே இஷ்ட தெய்வம் என கேள்விப்பட்டேன் ,.தவிர
இவர் தமிழ் ,சம்ஸ்கிருதம் தெலுங்கு போன்ற மொழிகளில் இயற்றிருக்கிறார்இவர்இயற்றிய பாடல்களைக்கச்சேரியில் பாடினதில்லையாம் எல்லாம் இவரதுசிஷ்யர்கள் தான் பாடிப்பரப்பினார்கள். இத்தனைச்சிறப்புப்பெற்றிருந்தாலும்துளிக்கூட கர்வமில்லாமல் எல்லோரிடமும் அன்புட்ன் பழகி பலருக்கு பலஉதவிகளைச்செய்வார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர் ,தவிரசினிமாவிலும்{பாமாவிஜயம் சகுந்தலை சதிஅனுசுயா ,உதயணன் வாசவதத்தை} நடித்திருக்கிறார்இவர் வடநாட்டிலும் பல ஹிந்துஸ்தானி பாடகர்களுடன் நட்புகொண்டு அவர்களின் ஹிந்துஸ்தானி ஸ்டைலையும் சில ராகத்தில் சேர்த்துபாடுவார் ,ப்டேகுலாம் அலி அவர்கள் இவருடைய பரம நண்பர் இவரது ரசிகர் இவரதுஹிந்தோளம்ஸாமஜவரகமனா" என்பதைக்கேட்டு தனது மால்கோசுடன்ஜுகல் பந்திப்போல் பாடுவாராம் இருவ்ரும் மூன்றுகாலங்களிலும்ஸ்வரங்கள் ராகாஅலாபனைப்போன்றவைகள் பாட கேட்டவர்கள்ஆனந்தத்தை அனுபவித்தனராம்இதேபோல் திரு பாலகந்தர்வா திரு பியாரிலால சாஹேப் போன்றவர்களும் இவரின்நண்பர்கள் ஆனார்கள் ,,ஒருதடவை இவர் டிஆர் மாலியின் புல்லாங்குழலைக்கேட்டப்பின்"என் பாட்டு இதன் முன் ஒன்றுமே இல்லை ,நல்லவேளையாக படிப்பு என் வசம்இருப்பதால் எதாவது வேலைத்தேடிக்கொள்வேன் என்று விளையாட்டாகச்சொல்லசெம்மங்குடி திரு ஸ்ரீனீன்வாசய்யர் அவர்களும்" ஆமாம் என்ன வாசிப்பு !நானும் என் நிலத்தைப்பார்த்துக்கொள்ளப்போய்விடுவேன் "என்றாராம்திரு ஜி என் பி எல்லோரையும் வாய்விட்டுப்புகழுவார் அவருக்குகொஞ்சம் கூட பொறாமையோ பேரசையோ இருந்ததில்லை ,இவர் முதல் கச்சேரி மைலாப்பூர் கோயிலில் நட்நதது ஒரு பெரிய பாட்கர்கச்சேரி பாட வரமுடியாத நிலையில் இருந்ததால் இவரைப்பாடச்சொன்னார்களாம்அன்றையக்கச்சேரியிலிருந்துஅவர் மேலே உயர்ந்துக்கொண்டே போனார் ,இவரது பாடும் விதம்,,,,,,,, தன்க்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டுபிருக்காக்களுடன் டெம்போ குன்றாமல்அப்படியே கடைசிவரை நீடிக்கும் ,,,,,குரலும் கணீரென்று இருக்கும்கீழ்ப்பஞ்சமும் மேல்பஞ்மும் மிகவும் எளிதாகத்தோட்டு நிற்கும்ஒரு தட்டிலிலேயே 16 ஸ்வரங்கள் மேலேயே பிருகாவுடன் போகமுடியும்,இவரது கல்பனா ஸ்வரம் மிகவும் அருமை
சண்டவரிசையின் பிரயோகங்கள் வரும் ,சிலகீர்த்தனைகளுக்குசிட்டஸ்வரங்கள் இய்ற்றியிருக்கிறார் ,இவரது வாசுதேவயனி பாடலும் அந்த கலயாணி ராகமும்மறக்கமுடியாது அதேபோல் ரஞ்சனி நிரஞ்சனி என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையும்வசந்தபைரவி யில் நீதயராதாவும் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது,இவரது செல்வங்கள் இந்த இசைக்கலையில் முன்னுக்கு வரவில்லை .எனநினைக்கிறேன் ஆனால் இவரது சிஷ்யர்கள்புகழ்பெற்ற எம் எல்வி என்ற வசந்தகுமாரிதிரு திருச்சூர் ராமசந்திரன் திருமதி ராதா திருமதி ஜெயலட்சுமிதஞ்சாவூர் திரு கல்யாணராமன் திருமதி பூஷணி கல்யாண்ராமன்திரு டிஎஸ்பாலசுப்பிரமண்யன் மிகவும் உன்னதநிலையைஅடைந்திருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது ,இவர்பெற்ற உயர்ந்த பதவிகள் ஆஸ்தான வித்துவான் திருவனந்தபுரம்ஆஸ்தான வித்துவான் எட்டயப்புரம்சங்கீதகலாநிதி , பிரசிடண்ட் அவார்டு {டாக்டர் எஸ் ராதாகிருஷணன்அவர்களால் வழங்கப்பட்டது }ஆல் இந்தியா ரேடியோவில் deputy chief producer , principalof swathithirunal collegeஇவரைப்பெற்ற புண்ணிய தம்பதிகள் திரு ஜிவி நாராயணஸ்வாமிதிருமதி விசாலாக்ஷிஇவரது குரு திரு குருஸ்வாமி பாகவதர் மதுரை சுப்பிரமண்யர்எத்தனைக்காலம் ஆனாலும் இவரது இசை எல்லோர் மனதிலும்ஒரு பரவ்சத்தை அளிக்கும் என்பது உண்மை இந்த இசை மகானைத்தலை வணங்குகிறேன்

ஏழுசை வள்ளல்

அந்த மாணவன் தன் வீட்டிலிருந்து கபில நதி வழியாகச்சென்றுகொண்டிருந்தான் நடுவில் நின்று தன் காபிநோட்டை எடுத்துப்பார்த்தான்,அந்த நேரம் அவனது ஆசிரியர் அங்கு வந்தார் ," என்ன இங்கு நின்று என்ன செய்கிறாய் ? உனக்குத்தான் படிப்பு வரவில்லையே! கொண்டா அதை ,"என்றபடி அவனது நோட்டைகிழித்து நதியில் வீசி எறிந்தார்"போ உன் வீடு திரும்பிப்போ உனக்குத்தான் சங்கீதம் நன்னா வரதேஅதைப்பிடிச்சுக்கோ இன்மேல் பள்ளிக்கு வராதே "ஸ்கூலுக்குக்போனமகன் உம்மென்ற முகத்துடன் திரும்பி வந்தான் ,அவன் அம்மாவிஷயம் அறிந்தாள் ,அவரே பெரியஇசை மேதை தான் ,அவனை பக்கண்ணா என்ற ஒன்றுவிட்ட சகோதரரிடம் இசைப்பயிலஅனுப்பிவைத்தார் ,குறுகிய காலத்துக்குள்ளேயே அந்த மாண்வன் எங்கேயோ போய்விட்டான் ,,,எங்கேதன்னையும் மிஞ்சிவிடப்போறானே என்ற எண்ணத்தினால் குறுகிய மனப்பான்மையுடன்ஒரு ஜோசியரை வரவழைத்தார் ,அந்த ஜோசியர் அஹோபிலமட பண்டித் ,,,அவரும் வந்தார் சினிமாவில் வருவதுப்போல் கையைப்பார்த்துவிட்டு "இந்தப்பையனுக்கு இசையே வராது வந்தாலும் முன்னுக்கு வரமுடியாதபடிகிரகங்கள் இருக்கே" என்றார்இதுதான் இந்த மாண்வனின் வெற்றிக்கு முதல் படி ,எப்படியும்உச்சியை எட்டிவிடவேண்டும் என்று மனதிலே வீம்பு கொண்டார்தன் மாமாவின் உதவியால் பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் இசைப்பயிலகுருகுலமாகச்சேர்ந்தார் , அவரது 16 வயத்லிருந்து ஆரம்பித்து சுமார் 21வருடங்கள் வெற்றிபடிகளிலேயேஏறினார் பட்டங்கள் குவிந்தன ,,முதன் முறையாக ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடித்து தன் லட்சியத்தை அடைந்தார்,இப்போது தெரிந்திருக்கும் இவர் யாரென்று ?.........வயலின் மேதை மைசூர் திரு சௌடையா தான் இவர் ,இவர் சாதகத்தைச்சொல்லிமுடியாது ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அசுர சாதகம்செய்வாராம் தவிர பிராணயாமம் யோகாதியானம் உடற்பயிற்சி குருசேவை என்று பலவற்றில் ஈடுபடுவார் ,இவர் தினமும் அதிக பயிற்சி செய்வது சரளிவரசை சண்டவரிசை அலங்காரம்,,,,,,,,அதனால் அஸ்திவாரம் மிகவும்பலமாக இருந்தது ஆரம்பத்தில் ஒரு கச்சேரியில் இவரது கைப்பிசற கொஞ்சம்
அபஸ்வரம் கேடக குரு அந்த இடத்திலேயேகன்னத்தில் அறைந்துவிட்டாராம் ,இவரது வயலினில் சுருதி பிசகாமல் இருக்க ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடிக்கும் எண்ணம் கொண்டார்தன் குருவின் ஆசிகளுடன் சப்தஸ்வர தேவதைகள் ஆசிகளுடன் மைசூர் ரங்கப்பாஉதவியுடன் ஏழு தந்திகள் கொண்ட வயலின் இவர் கைகளில் ஏறி தோளைஅலங்கரித்தது ,இந்த வயலின் மேதையைபெற்ற தம்பதிகள் திரு அகஸ்தியகௌடா திருமதி சுந்தரம்மாஇவர் எல்லா பிரபல வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்மதுரை மணிஅய்யர் , மகராஜபுரம் அவர்கள்ஆலத்தூர் பிரதர்ஸ் செம்மங்குடி ,அரியக்குடி செம்பை ,,என்ற பலர் இதில் இடம் பெறுவர்தவிர இவர் சொந்த சாஹித்யமும் இயற்றிருக்கிறார் ,இவர் வாங்கிய அவார்டுகள் பட்டங்கள் பலசங்கீத மணி , வாத்ய ரத்னாகரா ,, ஏழிசை வள்ளல்தந்திரி விலாஸ் இன்னிசை நாதமணி நாத சுதார்ணாசங்கீத சூடாமணி கலைமாமணி நாதயோகீஸ்வராசுஸ்வர் சுகலய சங்கீதா நாதக்கனல் வயலின் கலாநிதி சங்கீத சுதா பிரவாஹா மதுரை கலாபிரவீண்சங்கீத கலாநிதி ,,,,,,

இவர் பெயரில் சௌடையா மெமோரியல் ஹால் என்று 1980ல் வயலின் உருவத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டதுசுமார் ஆயிரம் பேர் அமரலாம் இன்றும் அங்குப்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன்அங்கு ஒரு தெருவின் பெயர் சௌடையா தெரு எனச்சூட்டப்படிருக்கிறதுசங்கீத ரதன சௌடையா ம்யூசிக் அவார்டு கொடுக்கப்டுகிறதுஇவர்து பிரதமசிஷ்யர் வி சேதுரமய்யா அவர்கள் இவரது மற்றொரு சிஷ்யர் ராமரத்னம் சங்கீத கலாரத்னா மைசூர் இசைக்கல்லூரியில்முதல்வர்.

இவர் திருமகூடலூவில் 1895ல் பிறந்தார் 19 ஜனவரி 1967ல்மறைந்தார்இந்தக்கட்டுரை எழுத மூலகாரணம் ரேடியோவில் அவர்து இசைக் கேட்டது தான் தோடியில் ஏராநாபை வர்ணம் ,,,எனக்கு,,,,,அவரது ஞாபகங்கள்:வரிசையாக வந்தன ,,,,,,,அந்த இசைஞானிக்கு என் வந்தனம்