Friday, June 20, 2008

சிற்றிலக்கியங்கள் முதல் பாகம்

இலக்கியங்கள் பண்டைக்காலத்திலிருந்தே பல தோன்றி நமக்கு பொக்கிஷமாக
இன்றும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது திணைவகை இலக்கியம் நீதி இலக்கியம் ,பக்தி இலக்கியம் என்று
பல சொல்லலாம். சோழர் காலத்தில் காப்பிய இலக்கியம் மிகச்சிறப்பும் செல்வாக்கும் பெற்றது
சிற்றிலக்கியத்தில் ஆற்றுப்படை பிள்ளைத் தமிழ் , பரணி பள்ளு கலம்பகம்
என்று பல உயிர்ப் பெற்றன தமிழில் சுமார் ஒரு நூறு சிற்றிலக்கியங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது

திணைவகை இலக்கியத்தில் அகத்திணை புறத்திணை என இரண்டு ,,,,
நீதி இலக்கியத்தில் திருக்குறள் நல்வழி ,நீதிநெறிவிளக்கம் போன்றவை
பக்தி இலக்கியம் ,,தேவாரம் திருவாசகம் திவயப்பிரபந்தம் போன்றவை
அந்தாதி ,,அபிராமி அந்தாதி
காப்பியம் ,,,,,,,.. சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி
குண்டலகேசி

ஆற்றுப்படை சிறுபாணாற்றுப்படை திருமுருகாற்றுப்படை ,,,

சிற்றிலக்கியங்களில் பதிகம் என்பது ஒருவரைக் குறித்து பத்துச் செய்யுள்
பாடுவது ,சதகம் என்பது நூறு செய்யுள் கொண்டது அந்தாதி என்பது அந்தத்தையே திரும்ப ஆதியாகக்கொண்டு புனைவது ஒரு செயுயுளின்
இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ அடியோ சீரோ அடுத்து வரும் அடியில்
முதலாக வந்து செய்யுள் தொடரும் .இதிலேயே நூறு வெண்பாக்கள் பாடுவது
அந்தாதி இலக்கியம் இதுப்போல் பேயாழ்வார் .பொய்கையாழ்வார் ,
பூதத்தாழ்வார் பாடி இருக்கின்றனர் .

ஒரு அரசன் அல்லது தலைவன் ,இறைவன் வீதியில் உலா வரும் போது
அவனைப் பார்த்து மனம் பறிக்கொடுத்து காதல் கொள்வர் சிலப்பெண்கள்.
அவன் சென்றப்பின் அவனையே நினைத்து ஏக்கத்துடன் வேதனையுடன் அமைக்கும் செய்யுள் "உலாபிரபந்தம் "இதில் எல்லா வயது பெண்மணிகளும்
உணர்ச்சிகளைக் கொட்டி உலா செய்யுள் பாடுவார்களாம் சில நாட்டிய
பதங்களிலும் இதுப்போல் நாயகனைப் பார்க்கத் துடிக்கும் நாயகி காதல்ரசம்
கொண்டு பாடிய பாட்டுக்கள் பல உண்டு வடநாட்டில் இருக்கும் ராஸலீலா
கீதகோவிந்தம் போல பாடலகள் இது போல் உள்ளன ,முதல் உலா இலக்கியம் பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார் ,அவர் எழுதிய நூலின் பெயர் "ஞான உலா " உலாவில் வந்தத்தலைவர் சிவபெருமான் . அதன் பின் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா மிகவும் சிறப்புப் பெற்றது

No comments: