Saturday, June 21, 2008

பெண் என்பவள் ஒரு கரும்பு

பிறவியிலேயே பார்வை இழந்தவர் பெரிய கவிஞராகி புகழ் பெற்றார் அவர் முதுகில் தமிழ் எழுதச் சொல்லிக் கற்றுக் கொண்டவர் என்று கேட்கும் போது நான் கண்ணிருந்தும் இன்னும் நிறைய சாதித்திருக்கலாமே என்று தோன்றுகிறது
இவர் பலர் படிப்பதைக்கேட்டு மனப் பாடம் செய்து ஒப்பிப்பார் பல மணி நேரங்கள் கவிதைச் செய்து பழகி பின் பெரிய கவிஞர் ஆகிவிட்டார் இவரை
"அந்தகக் கவி " என்று எலோரும் போற்றினர் ,இவர் தான் திரு வீர ராகவர் ,

இவர் ஒரு சமயம் ஒரு நூல் எழுதினார் இக்காலம் போல் அத்தனை எளிதாக
அதற்கு ஒப்புதல் கிடைப்பது அந்தக்காலத்தில் இல்லாத ஒன்று ,முதலில்
சபைக் கூட்ட வேண்டும் பின் நூலை அறிமுகப் படுத்த வேண்டும் சபையில்
இருப்பவர் அதை அலசுவர் ,அதில் இருக்கும் நல்லது ,அல்லது கெட்டதை வெளிப்படையாகக் கூறுவர் பொருட்குற்றம் சொற்குற்றம் இருப்பின் அதை
அரங்கத்தில் அம்பலப்படுத்துவர் , இவர் எழுதிய நூலில் ஒரு பெண்ணைப்
பற்றி சித்தரித்திருந்தது அதாவது பெண் என்பவள் "கரும்பு" என்றார்
அதாவது அத்தனை இனிப்பானவள் சுவையானவள் இனிமையானவள்,,,,,,,,,,

அத்துடன் கருமபு விளையும் இடத்தையும் வர்ணித்தார்

ஏரியிலிருந்து பால் பாய ,தேன் மழைப்பொழிய,,வயலுக்கு எருவாக பாகும்
கற்கண்டும் சேர முப்பழங்கள் சேராக அமைந்தன அந்த வயலில் விளைந்த
கரும்பு தான் பெண்,,,

"பாலேரி பாயச்செந்தேன் மாரி பெய்யநற் பாகு நற்கண்
டாலே எருவிட முப்பழச் சேற்றின் அமுத வயல்
மேலே முளைத்த கரும்போ ,,,,,,,,,

என அமைந்திருந்தன சபையில் இதை அவரது மாணவன் படித்துக் காட்டினான்
எல்லோரும் கரகோஷம் செய்தனர் ஆனால் ஒரு பெண்மணி "இந்தக் கவிதையில் கருத்து கெட்டிருக்கிறது ,,கவிஞருக்கு கண்தான் கெட்டிருக்கிறது என நினைத்தேன் ஆனால் கருத்தும் ,,,,என்று இழுத்தார் அவர் சொன்னது
கவிஞருக்கு உடனே புரிந்து விட்டது தன் பிழையை உணர்ந்தார் பின் தன்
மாணவனிடம் " சீடா கொம்பை வெட்டிக் காலை நடு " என்றார் மாணவனும் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் ,,உடனே "கப்பென்று"பிடித்துக் கொண்டான்
பாடலை மாற்றி படித்தான் "முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே
முளைத்த கரும்போ" ,,

அந்த பெண்மணி கூறினார் "மூன்று பழங்களைப்பிழிந்தால் அது பழ்ச் சாறு
ஆகத்தான் இருக்கும் எப்படி சேறாக முடியும் ?

கவிஞர் இதைப்புரிந்துக் கொண்டு ,தன் மாணவனிடம் "கொம்பை வெட்டி காலை
நடு என்றார்,அவனும் கொம்பு கால் எது என்று கேட்க்காமல் "சேறு என்பதில் உள்ள கொம்பை நிக்கினான் "ச்" எழுத்தின் பக்கத்தில் ஒரு காலை எழுதினான்
அது "சா"ஆனது பின் என்ன எல்லோரும் அவரது கவி நயம் கண்டு
வியந்தனர் அந்த நூலும் மிகச் சிறப்பாக அரங்கேறியது

No comments: