Friday, June 20, 2008

சிற்றிலக்கியங்கள் 2 பாகம்

சிற்றிலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்பது ஒரு தெய்வத்தையோ அல்லது
சிறந்தத் தலைவரையோ ,ஒரு அரசனையோ வைத்து அவர்களின் சிறு பிரயாத்தினை வைத்துப் பாடல்கள் புனைவது .
அந்தப் பிள்ளைப் பருவக்காலப் பகுதியைப் பத்துப்பருவங்களாகப்
பிரித்து பருவத்துக்கு பத்து ஆசிரிய
விருத்தங்களாக இயற்றி பாடுவர் பிள்ளைத் தமிழ் என்றாலே கண்ணனின் பலவிதமான நம்மைக் கிறங்க வைக்கும்
செயல்கள் நம் கண் முன் வருகின்றன.
பெரியாழவார், மிக அழகாக்ப் பாடி இருக்கிறார். குலோத்துங்கரும் ஒட்டக்கூத்தரும்
மிக அருமையாகப் பிள்ளைத்தமிழ் இயற்றி இருக்கின்றனர் . ஸ்ரீகுமரகுருபரரின் மினட்சி அம்மைப் பிள்ளைத் தமிழும்,
மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின்
சேக்கிழார் பிள்ளைத்தமிழும் சிறந்து விளங்குகின்றன .
பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்த்மிழும்,மிகச் சிறப்பாக அமைந்துள்ளன .
,

நாம் கதம்பத்தைப் பார்த்திருக்கிறோம் அதில் பலவகைப் பூக்கள் சேர்ந்து
கட்டப்பட்டிருக்கும் ,அதேபோல் பலவகைப் பாக்களைக் கொண்டுச் செய்யப்
படும் இலக்கியம் கலம்பகம் ,,,,,
இதற்கு 18 உறுப்புக்கள் உண்டு இதில் அகப்பொருளும் புறப்பொருளும் தன்னுள்ளே கொண்டிருக்கும் .தமிழில் எழுதிய முதல் கலம்பகம்
"நந்திக்க்லம்பகம்"அதன் பின் வந்தக் கலம்ப்கம் "காசிக் கலம்பகம் .
இதைக்குமரகுருபரர் இயற்றினார்."தில்லைக்கலம்பகத்தை "இரட்டைப்புலவர்கள்
பாடினார்கள் . சிவப்பிரகாசர்"திருவெங்கைக் கலம்பகம் பாடினார்
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் "திருவரங்கக் கலம்பகம் பாடி இருக்கிறார்.


"பரணி " என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்று .அரசன் போருக்குப் போகுமுன்
வீரத்தை வழங்கும் காளி பவானி போன்ற தெய்வத்தைப் பூஜித்து ,பின் போர்க்களம் சென்று
அங்கு கூழ் ஊற்றி பின் மகிழ்வான் அவனது வெற்றியைக் குறித்து பாடுவது "பரணி"
பாடல்கள் கலிங்கப் போரில் குலோத்துங்கன் வெற்றி பெற்றான்
அதுவே "கலிங்கத்துப் பரணி "ஆனது ,இதைப் பாடியவர் திருசெயம்கொண்டார்,


அடுத்து வருகிறது "பள்ளு" ,,,,,,,உழவர்கள் பள்ளமான வயல் வெளிகளில் ஏர்
பூட்டி உழவார்கள் இந்த உழவர்களையும் உழவுத்தொழிலையும் குறிக்கும்
பாடல்கள் "பள்ளு " என்பதாகும்
குறிச்சொல்லும் குறத்திகளின் பாடல்கள் குறவ்ஞ்சி என்பதாகும்
முக்கூடத்து பள்ளும் "குற்றாலக் குறவஞ்சியும் " எல்லோருக்கும் தெரிந்த்வை
சில நாட்டியங்களில் இந்தக் குறத்தியின் பாடல்கள் நடனத்தில் சேர்ப்பார்கள்
"வஞ்சி வந்தனளே மலைக்குறவஞ்சி வந்தனளே" என்று அந்தக் காலத்தில்
குமாரி கமலா அவர்கள் ஆடியது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது

No comments: