Sunday, October 3, 2010

பித்ருகர்மா

தருமபுத்திரரை யக்ஷன் ஒரு கேள்வி கேட்டான்

"உலகத்தோரால் கொண்டாடப்பட்டாலும் எவன் உயிரற்றவன் போலாவான்?"
தருமபுத்திரர் நிதானமாக யோசித்தார் ,பின் கூறினார்

"தெய்வம் , அதிதி பணியாட்கள் பித்ருக்கள் ஆகியோருக்கும் ஆத்மாவுக்கும்
எவன் திருப்தி செய்யவில்லையோ அவன் மூச்சு விட்டாலும் உயிரற்றவன் போலவான்
"

இந்தப்பதில் சரியானதாக இருக்க யக்ஷன் திருப்தி அடைந்தான்

ஆடி மாத அமாவாசை தை மாத அமாவாசை மாஹாளய பக்ஷம்
அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களைத்திருப்தி படுத்துவது
அவசியம் .இதை தர்மசாஸ்திரமும் தெளிவாக கூறுகிறது
இறந்த முன்னோர்களை நினைத்து அவருக்கு நன்றி தெரிவிப்பது நமக்கு
விதிக்கப்பட்ட கடமைகளில் மிக முக்கியமான ஒன்று

கோயிலுக்குச்செல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஒவ்வொருவரும்
இறந்த தமது பெற்றோர்களுக்குச்சிரார்தம் செய்வது மிகமிக அவசியம்
இவைகளைக்கைவிட்டால்தான் பித்ருதோஷம் என்று ஒன்று ஏற்பட்டு
வம்சத்தையே பாடுபடுத்துகிறது அவர்களைத்திருப்தி செய்யாவிட்டால்
பித்ரு சாபம் "என்று ஒன்று வந்து சேர்கிறது

இந்து மதத்தில் குடும்பத்திற்கு மிக முக்கியத்வம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் உயிரையும் கொடுத்து தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு
கல்வி ,நற்பண்புகள் சொல்லிக்கொடுத்து வளர்த்து ஆளாக்குகிறார்கள்
இதைச்செய்யும் போது பல தியாகங்களையும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட
அவர்களைக் கடைசிக்காலத்தில் நன்கு கவனிப்பதோடுமல்லாமல் இறந்தப்பின்னும்
சாஸ்திரப்பிரகாரம் , சிரார்த்தம் தவறாமல் செய்ய வேண்டும் செய்வதில் ஒரு
சிரத்தையும் இருக்க வேண்டும் அப்படி செய்தால
பித்ருக்கள் மகிழ்ந்து போக பித்ரு தேவதைகள் நமக்கு நற்பலனை
அளிப்பார்கள் .ஒவ்வொருவரும் விடாமல் செய்ய வேண்டிய கர்மா இது

Saturday, October 2, 2010

வினோதமான பிரார்த்தனை

தில்லியில் ஒரு சமயம் என்னை ஒரு புத்தமத கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் ,அதில் எல்லோரும் பிரார்த்தனை , தியானம் பின் அவர்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது என்று நேரத்தைப்பிரித்துநிகழ்ச்சியைத் தயார் செய்திருந்தார்கள் .
அதன் பின் செவிக்கு ரசமான உணவு அதாவது பாஸிடிவ் சிந்தனைகொண்ட பாடல்கள்
பின் நடனம் என்று பல அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டும் இருந்தன . என்னை அவர்கள் வயலின் வாசிக்க அழைத்திருந்தனர் அதன் பாட்டு "ஹே மாலிக் தெரே பந்தே ஹம் -சரி நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ்ந்து முதன் முதலாக அந்தப் புத்தமத கூட்டத்திற்குப்போனேன்


,ஒரு அறையில் அழகான் அலமாரி .
பர்மா தேக்கினால் ஆனது. அதில் பலவிதமான வேலைப்பாடுகள் கண்களைக்
கவர்ந்தன. ஊதுவத்தியின் நறுமணம் ஊரைத் தூக்கியது ,அந்த அலமாரியின் உள்ளே எதோ பாலி மொழியில் ஒரு மந்திரம் போல் எழுதி இருந்தது. ஒரு தலைவி ஒரு சேகண்டி எடுத்து ,மூன்று முறை டண் டண் டண் என்று தட்டினாள் பின் ஒர் கிண்டிபோல் உள்ளதிலிருந்து தெளிவான சற்று நறுமணமுள்ளத் தீர்த்தம் எடுத்துத் தெளித்தாள் சங்கு முழங்கியது.
நிறைய பழங்கள் வைக்கப்பட்டிருந்தன .பின் எல்லோரும் கண்களை மூடிக்கொண்டனர் தியானம் ஆரம்பமாகியது .

பின் அவர்கள் ஒரே குரலில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர் ,ஆஹா வண்டுகள் ரீங்காரம் செயவது போல் ஓம் என்ற சத்தம் என் காதில் கேட்டது ,அந்த ஹால்
முழுவதும் தென்றல் வீசுவது போல் அந்த மந்திர ஒலி வரிசையாக அடுக்கடுக்காய் வந்தது அவர்கள் சொன்ன மந்திரம்

"நம்யோஹோ ரெங்கே க்யூ ,,,,,இதைச் சற்று மூக்கால்
சொல்லுகிறார்கள் ,,நானும் கூடச் சொன்னேன் இதை தினமும் ஜபித்தால் எல்லா வித்ததிலும் வெற்றிதான் என்கிறார்கள் மன அமைதி கிடைக்கவும் இதைச் சொல்கிறார்கள் இதுவே வேகம் குறைவாகவும் பின் வேகமாகவும் மொழிகிறார்கள்
அவர்களுக்கு இதற்கென்று சில எண்ணிக்கைகள் இருக்கின்றன ,அதன் பிரகாரம் செய்கிறார்கள்,


இந்த இயக்கத்தின் தலைவர் மாகிகுச்சி Makiguchi ,,nikko shonan joshe Toda
பின் கடைசியில் அவர்கள் தங்கள் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு முடிக்கிறார்கள்.


ஷோய் ஷோஹோ ந்யோஸீஸோ nyo ze so
ந்யோஸீ ஷோ ந்யோ ஸோதாய் ,
ந்யோ ஸீரீகீ ந்யோஸீ ஸா
ந்யோ சீ இன் ந்யோஸீ என் ,,
ந்யோ ஸீகா ந்யோஸீ ஹோ
ந்யோ ஸீ ஹான் மக் காக்யோ டோ

சேகண்டியால் மூன்று தடவை டண் டண் டண் ,,,,என்று அடித்து முடிவு பெறுகிறது அந்த ஹாலில் நற்றலைகள் பரவி என் உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை நான்
உணர்ந்தேன் ,,,,புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரண கச்சாமி ,,,,

அங்கு இருந்த சலவைக்கல்லினால் ஆன புத்தரின் சிலையின் சாந்தமும் கண்கள்மூடிய நிலையில் அமைதியும் புன்னகையில் ஒரு ஆனந்தமும் கிடைக்கப் பெற்றேன் .

பின் சிலர் தங்கள் பிரச்சனைகளை பிரார்தனை மூலம் சபை முன் வைத்தனர் சில பிரார்தனை நியாயமாக இருந்தது ஆனால் சில மிகவும் மிகவும் வருத்தப்படும்படியாக இருந்தது

ஒரு பென்மணியின் பிரார்த்தனை " என் மாமியார் கூடிய சீக்கிரம்
எங்களை விட்டுப்போய்விடவேண்டும் அப்போதுதான் வீட்டில் நிம்மதி "இப்படி ஒரு பிரார்த்தனை கேட்க அதிர்ச்சியாக இருந்தது எத்தனைக்கொடுமை மாமியாரானாலும் ஒரு மகனுக்குத் தாயல்லவா?

இன்னொரு பிரார்த்தனை வேடிக்கையாக இருந்தது அப்போது கிரிக்கெட் விளையாட்டு நடந்துக்கொண்டிருந்தது இந்திய அணி படு தோல்வியைத்
தழுவிக்கொண்டிருந்தனர் ஆனால் ஸ்ரீலங்காஅணி மிகப்பிரமாதமாக
ஆடியது இதை மனதில் கொண்டு ஒரு பெண்மணி பிரார்த்தனையில்
ஸ்ரீலங்கா தோல்வி அடைந்து இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று
வேண்டச்சொல்கிறாள்

இதெல்லாம் பார்த்தால் ஒருமாதிரியாக இருந்து மனம் அங்கு ஒப்பவில்லை
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனைக்கு
ஆதாரம் சர்வே ஜனானாம் சுகினோ பவந்து " என்றே பல இடங்களில்
ஆன்மீகக்கூட்டம் முடிவடையும் இங்கு வேண்டிய பல அபத்தமான
பிரரர்த்தனனயில் அதிக சுயநலமே கண்டேன் ஒரு சமயம் நான் போயிருந்த
இடத்தில் அப்படி நடந்திருக்கலாம் அதனால் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டுவது நியாயமில்லை ஆகையால் அங்கு நடந்த மந்திரங்கள் பஜனைப்பாடல்கள் பின் வயிறுக்கும் விருந்து இவைகளில் திருப்திக்கொண்டு வீடு வந்துச்சேர்ந்தேன்

விரதம்

ஆவணி மாதம் வந்தாலே விரதங்களும் கூட வந்துவிடும் இதில் பெண்களின் சௌபாக்கியத்திற்கும்
சுமங்கலிகளுக்கென்று ஒரு விரதமும் மிகவும் சிறப்பாக பெண்களால் செய்யப்டுகின்றன

ஸ்ரீவரலட்சுமி விரதம் ஜன்மாஷ்டமி விரதம் மங்களாகௌரிவிரதம் நாகபஞ்சமி விரதம் கருடபஞ்சமி விரதம் ,வினாயகசதுர்த்தி விரதம் என்று ஆவணியை பல விரதங்கள் அணைக்கின்றன

விரதம் இருப்பதால் நம் மன உறுதி மேலும் பலப்படுகிறது மனவலிமையால் செய்யமுடியாத காரியங்கள் தான் உண்டோ?
இந்த விரதத்தை சம்ஸ்கிருதத்தில் உபவாசம் என்கின்றனர் வாசம் என்றால் இருத்தல்
உபவாசம் என்றால் பக்கத்தில் இருத்தல் என்று பொருள் கொள்ளலாம் யார் பக்கத்தில் ?
நிச்சியமாக இறைவன் அருகில் தான் .....இது எப்படி சாத்தியமாகிறது ? ஆம் எப்போது மனம் ஒருமுகமாக ஒரே சிந்தனையுடன் ஒரே காரியத்தில் ஈடுபடும்போது அது இறைவன் சமீபம் போகும் சக்தி பெறுகிறது
மனம் சிதற உணவும் ஒரு காரணமாக அமைகிறது உணவிலும் சத்வ உணவு ரஜசு தமசு என்ற உணவுகள் இருக்கின்றன .கபம் பித்தம் வாதம் என்ற பிரிவிகள் நம்முடலில் எத்தனைத்தேவையோ அந்த அளவு தான் இருக்க வேண்டும் இவை குறைவோ கூடியோ இருக்க நோய் வருகிறது ஆயுர்வேதம் இதைக்கொண்டு தான் செயல்படுகிறது

உபவாசம் வரும் தினங்களில் துளசி தீர்த்தம் மட்டும் எடுப்பது மிக உன்னத முறையாகும் சிலருக்குச் சர்க்கரை நோய் இருக்குமானால் ஒரு வேளை மட்டும் கஞ்சியோ சேர்த்துக்கொள்ளக்கூடிய பழங்களோ வயதானவர்கள் எடுத்துக்கொள்ளலாம்
இந்த விரதங்கள் கடைப்பிடிக்க ஒரு கட்டுப்பாடு நம்மால் மிக எளிதாக உருவாக்க முடிகிறது
வயிற்றுப்பசி விரதத்தன்று வராமல் இருக்க மனதை ஒரேநிலையாக வைத்து மனப்பசியை வளர்க்க
வேண்டும் மனதில் கூட பசிக்குமா? ,,மனப்பசி என்பது இறைவனின் சான்னித்யம் பெறுவதே .
அதுவே ஒரே இலக்காக இருந்தால் வயிறு பசிக்காது வடநாட்டில் வசந்த நவராத்திரியின் போது
வெறும் தண்ணீர் மட்டும் குடித்து இரவில் ஒரு வாழைப்பழம் மட்டும் எடுத்து அமாவாசையிலிருந்து
நவமி வரை விரதம் இருப்பவர்கள் பலர் சிலர் பள்ளி ஆசிரியர்கள் நான் இதைப்பற்றிக் கேட்டபோது எங்களுக்குப் பசி தெரிவதில்லை என்று சொன்னார்கள்

விரதத்தின் போது சூரியோதயம் முன் எழுந்து பல்துலக்கி பின் குளித்தல் வேண்டும் இதுவே புண்ணிய நதிகளோ ஆறுகளோஇருந்து அதில் குளிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் மனம் நாமஜபத்தில் இருக்க , பூஜை செய்ய சங்கல்பம் செய்துக்கொள்ள வேண்டும்
விரத்த்தன்று பகலில் தூங்கவோ வேறு ரசாபாசங்களிலோ ஈடுபடக்கூடாது மனதைத்தத்தளிக்கச்செயுயும் விஷயங்களிலிருந்து தூர விலகுவது நல்லது ஆன்மீகப்புத்தகங்கள் படிக்கலாம் அல்லது ஈச்வர நாமாக்களை எழுதலாம் .இதனால் புறத்தூய்மை அகத்தூயமை கிடைக்கவும் எல்லா நிலைகளிலும் சமபாகமாக எண்ணும் சக்தியும் கிடைக்கிறது
விரதம் அனுசரிப்பதால் தானாகவே தியான நிலை வருகிறது எப்படி என்றால்
பிரசாதம் செய்கிறோம். மனம் முழுவதும் இந்த மோதகம் பிள்ளையாருக்கே என்ற எண்ணமும்
அது நன்றாக அமையவேண்டும் என்ற சிரத்தையும் அந்தச்சிரத்தையால் வரும் கவனமும் தான் . இதெல்லாம் ஒரு யோகம் தான், தியானம் தான் . கோயிலின் பிரசாதம் சுவைக்க இதுவும் ஒரு காரணம் என்று தொன்றுகிறது . விரதத்தினால் ஈகோ அழிந்து மனித நேயம் வளர்கிறது பணிவும் தொடர்கிறது


நம் உடல் ஒரு இயந்திரம் தான்.அது தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருக்கிறது அந்த மசீனுக்கு ஒரு மாதத்தில் ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா ?

ஆகையால் விரதம் என்பது நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று .

Friday, October 1, 2010

முடிவிலாக்கீர்த்தி பெற்றாய்

இங்கிலாந்தில் ஒரு நாள். . காந்திஜிக்கு ஒரு விருந்துக்கு அழைப்பு வந்திருந்தது .அதை
தருபவர்கள் இந்திய சங்கத்தின் அங்கத்தினர்கள் .மாலை 6 மணிக்கு ஆரம்பம் ,
காந்திஜி நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார் ஆகையால் நேரம் தவறாமல்
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ஆஜராகிவிடுவார் .ஆனால் அன்று ஆறு மணி நெருங்கியும் இவர் வரவிலை . இது போல் ஒரு நாளும் நடந்தது இல்லையே என்று
குழம்பினார் சங்கத்தலைவர் . பலர் விருந்துக்குத்தேவையான ஏற்பாடுகளைச்செய்தபடி
இருந்தனர் ,
சங்கத்தலைவர் கிச்சனுக்குள் எல்லாம் எந்த அளவு தயாராகி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள போனார் அப்படியே அதிர்ந்துப்போய் நின்றார் .
அங்கு காந்திஜி அங்கு வேலைச்செய்த பலருடன் சேர்ந்து சமையல் வேலையை
கவனித்துக்கொண்டிருந்தார்
தலைவர் வேகமாக அவரை நெருங்கி 'என்ன பாபுஜி நீங்கள் இங்கேயா?
நீங்கள் அல்லவா சிறப்பு விருந்தினர் நீங்களே சமையல் வேலையைச்செய்யலாமா?
வாருங்கள் போகலாம் "

"சகோதரா நானோ சுத்த சைவம் இருக்கும் இடமோ இங்கலாந்து இங்கு சைவ உணவு
தயாரிப்பது கடினம் அதுவும் எனக்குத்தேவையான உணவு அவர்களுக்குத்தெரியாது
ஆகையால் நான் மாலை நாலு மணிக்கே இங்கு வந்து விட்டேன் இப்போது முடிந்து விட்டது ஆறுமணி விழாவுக்கு நான் ரெடி " என்றார்

அப்போதுதான் அங்கு வேலைப்பார்த்தவர்களுக்கு தங்களுடன் இருந்தவர் காந்திஜி
என்று தெரிய வந்தது அவரது எளிமையைப்பார்த்து வியந்து நின்றனர் அவர்கள் .

காந்திஜி எப்போதும் தன் பொக்கை வாயைக்காட்டியபடி இருப்பார்.அதாவது எப்போதும்
அவர் முகம் சிரித்த முகமாகவே இருக்கும் .மலர்ந்த முகம் என்றால் அவர் முகத்தைச்
சொல்லலாம்
ஒரு நாள் ஒருவர் அவரிடம் " பாபூஜி நாட்டில் இத்தனைப்பிரச்சனைகள் இருந்தும்
இத்தனைப்பொறுப்புக்கள் இருந்தும் உங்களால் எப்படி மலர்ந்த முகத்துடன் இருக்க
முடிகிறது தினமும் பல கவலைகள் சூழும்படி சந்தர்ப்பமும் அமைகிறது ஆனாலும்
எப்படி புன்னகையுடன் அமைதியாக இருக்கிறீர்கள்?

"இந்த மன அமைதியும் மகிழ்ச்சியான மனமும் தான் என்னைக்காப்பாற்றி வருகின்றன,
இவை இல்லாவிட்டால் நாட்டின் நிகழ்வுக்கும் எனக்குள்ள பொறுப்புக்கும் கவலைகளின்
மூட்டைக்கும் எப்போதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்"

என்று பதிலுறைத்தார் . இதிலிருந்து ந்ம் எல்லோருக்கும் தெரிவது புன்னகை என்ற
மருந்து தான் உடல் நலத்துக்கு மிக முக்கியமான ஒன்று

மஹாத்மா காந்திஜியின் பிறந்த நாளில் அவரை நினைத்து வணங்குகிறேன்
"