நாரியல் பூர்ணிமா என்பது தான் மராட்டியி நாராலி பூர்ணிமா ஆனது
ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய் கேரளாவின் ஓணம் தமிழர்களின்
யக்ஞோபவீததாரணம் அதாவது ஆவணியாவட்டம்
அத்துடன் வடநாட்டின் ராக்கித்திருநாள் பின் கடற்கரையோரம் வசிக்கும்
மீனவர்களுக்கு இந்த நாரியல்
பூர்ணிமா எல்லாம் அநேகமாக ஒரே நாளில் வரும் அதாவது ஆவணி மாத
பௌர்ணமியில் ,,,,
மும்பய் தாதர் கடற்கரைப்பக்கமோ அல்லது சௌப்பாதி கடற்கரைபக்கமோ போனால் பல
வண்ணங்களில் படகைப்பார்க்கலாம் நாம் மாட்டுப்பொங்கலுக்கு கொம்புகளில் வர்ணம் அடிப்பது
போல் மீனவர்கள் படகுகளுக்கு வர்ணம் அடித்து அதற்கு மாலைகளால்
அலங்காரமும் செய்திருப்பார்கள்.
எல்லா படகுகளும் புது மாப்பிள்ளைப்போல் மிளிரும் வடக்கில் உள்ள அதுவும்
மேற்கு திசையில் இருக்கும் எல்லா மீனவர்களும் இதைக்கொண்டடுகின்றனர்
தமிழ் நாட்டு மீனவர்கள் இதைக்கொண்டாடுகிறார்களா எனத்தெரியவில்லை
மீனவர்களுக்கு கடலே கோயில் கடலரசனே தெய்வம் அவர்கள் வயிற்றை நிரப்புவது
அந்தக்கடல்தான்
கடலுக்குள் சென்று மீன் பிடித்தால்தான் ஜீவனம் அதுவும் மே மாதத்திலிருந்து சுமார் செப்டம்பர்
வரை கடும் மழை நீடித்திருக்கும். தென் மேற்குப்பருவமழையின் காரணமாக
மீனவர்கள் இந்த மாதங்களில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல் மன உறுதியுடன்
மீன் பிடிக்கப்போயாக வேண்டும்
ஒவ்வொரு நாள் இயற்கையின் சீற்றத்தினால் போகாமலும் இருக்கும்
சந்தர்ப்பங்களும் வரும்
ஆகையால் இந்த ஆவணி மாதம் வர இனி கடும் மழை குறைந்து இனி தன் வியாபாரம்
நன்றாக அமைய மீனவர்கள் கடல் தெய்வத்தை வேண்டிக்கொண்டு தினமும் கடல் தங்கள்
வாழ்க்கைக்குப்படி அளப்பதால் அதற்கும் நன்றியை பூஜை செய்து தெரிவிப்பார்கள் அத்துடன் வருண பகவானுக்கும் பூஜை செய்வார்கள்
பிரசாதம் நாரியல் அதாவது தேங்காய் சமபந்தப்பட்டே இருக்கும் தேங்காய்
சாதம் தேங்காய் பர்பி என்று செய்து எல்லோருக்கும் வினியோகிப்பார்கள் தவிர பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை கடலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஆஹா அருமையான காட்சி தான்
அப்படியே அலைகளில் இரண்டு தடவைகள் மேலும் கீழுமாக வந்து பின் அலை அதை
இழுத்துக்கொண்டுப்போய்விடும் ,ஒரு தேங்காயா இரண்டுத்தேங்காயா ! ஆயிரக்கணக்கில்
தேங்காய் எல்லாம் எங்கே போகும் ? இதேபோல் பிள்ளையார் சதுர்த்தி
முடிந்த பததாம் நாள் எல்லா மண் பிள்லையார்களும்
கடலில் விடப்படுவார்கள் இதே போல் பெங்காலிகள் துர்கைச்சிலைகளை நவராத்திரி முடிந்தவுடன்
கடலில் வீசிவிடுவார்கள் .இந்தச்சிலைகள் மண்ணால் செய்ததால் கரைந்து போய்விடலாம்
ஆனால் இத்தனை மட்டைத்தேங்காய் என்ன ஆகும் என்ற கேள்வி என்னுள் எழும் .
கடற்பிராணிகள் தேங்காயை முழுங்கி விடலாம்
இந்தத்திருநாளன்று மாலையில் பார்ட்டிதான் ,எல்லோரும் புதிய உடைகளுடன்
மின்னுவார்கள்.
ஆண்கள் கட்டம் போட்ட லுங்கிகளை உடுப்பார்கள் முன் பக்கம் முக்கோணம் போல்
இருக்கும்
மீனவப்பெண்மணிகளின் புடவைக்கட்டு மிகப்பிரமாதமாக இருக்கும். அத்துடன்
அவர்கள் தலைக்கொண்டையும் கொண்டையில் வேணி என்ற பூ அலங்காரமும் மிகவும்
அழகாக இருக்கும்
அந்த வேணியின் அருகில் மருதாணிபூக்கள் பெரியக்காம்புகளுடன்
சொருகப்பட்டிருக்கும்
ஒரு படத்தில் மாதுரி தீட்சித் மீனவப்பெண்மணியாக வருவார்.நெற்றியில்
கால் சந்திரன் போல் பச்சையில்
பொட்டு வைத்திருப்பார் .அவரைப்பார்த்தால் எனக்கு இந்தத்திருநாள் ஞாபகம்
வரும் அவர்கள் நடனமும் மிக வேகமாக இருக்கும் . உடலில் நிறைய சக்தி இருந்தால் தான் இந்த நடனத்தை ஆடமுடியும்
கடல் நீருக்கு என்றுமே நெகடிவ் என்ற வேண்டாத சக்தியை எடுக்கும் சக்தி
உண்டு உப்பு கலந்த நீராயிற்றே! ஆடி அமாவாசை தை அமாவாசைப்போன்ற
தினங்களில் சமுத்திர ஸ்னானம் செய்கிறார்கள்
அத்துடன் கிரகணம் விட்டப்பின்னும் ஸ்னானம் செய்கிறார்கள் இந்த நெகடிவ்
விஷயமும் சம்பந்தப்ப்ட்டத்தாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது
திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் இந்தக்கல்லுப்பு முக்கியப்பங்கு
வகிக்கிறது
சரி இப்போது தேங்காய்க்கு வருவோம் மீனவர்கள் தேங்காயை ஏன் தேர்ந்தெடுக்க
வேண்டும்
தேங்காயை அனுபவிக்க முதலில் அதன் மட்டைகளைப்ப்பிய்க்க வேண்டும்.
பின் அதன் அழுத்தமான ஓட்டை உடைக்க வேண்டும் ,பின் தான் உள்ளே இருக்கும்
கனியைப்பெறமுடியும்
அதையும் அப்படியே தின்ன முடியாது .கீறல் போட்டோ அல்லது துருவியோ எடுக்க
வேண்டும்
மீனவர்கள் வாழ்க்கையும் காலையில் கடுமையான உழைப்பு இருக்க மாலையில்
தான் அதன் பலன் கிடடக்கிறது இதை வெளிப்படுத்துகிறதோ இந்தத் தேங்காய்
தேங்காய் நமக்கு வாழ்க்கை எடுத்த உத்தேசத்தைத்தெரிவிக்கிறது உள்ளே
இருக்கும் இனிப்பான கடவுளைக் காண முதலில் ஆன்மீகப்பாதையில் கடுமையான உழைப்பும் பல போராட்டங்களும் சந்திக்க வேண்டும்
மனம் தளராமால் அந்த ஓட்டை உடைத்து எறிய வேண்டும் பின் தெரிவார் அந்த
முக்கண்ணன் நமக்கு.
தேங்காயிலேயே மூன்று கண்கள் இருக்கின்றனவே !
மீனவர்களுக்கு என் வாழ்த்துகள்
Sunday, September 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment