

பாலகிருஷணன் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களுமே மிகப்புனிதமாகவும் புண்ணியஸ்தலமாகவும் இருக்கின்றன கண்ணன் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் எல்லோருக்கும் தெரிந்ததே !
ஜன்மாஷ்டமி நாளில் மதுரா விருந்தாவனில் எங்குத்திரும்பினாலும் ஒரு திவ்ய ஒலி தென்றல் வழியாக நம் காதில் வந்து மோதும்
.அதுவே "ஸ்ரீ ராதே கிருஷணா" ராதா இல்லாமல் அங்கு கிஸன் இல்லை
ஆத்மா பரமாத்மாவின் சேர்க்கை என்று கருதப்படுகிறது காற்றில் வந்து பின் தென்றலில் கலந்து
மிதந்து நம் காதில் செல்லும் இந்த ஒலி நம் உடலில் ஊடுறுவிப்பாய்ந்து நம்மைச்சிலிர்க்கவைக்கிறது.
திரு கண்ணதாசன் அவர்களின் "கங்கை கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் என்ற பாட்டில்
ராதையின் சிறப்பும் கண்ணன் வருகைக்காக ஏங்கும் கோபியர்கள் பற்றியும் நன்றாக விளக்கப்ப்ட்டிருக்கிறது
கண்ணனின் சுருள்முடி அழகே அழகு அதுவும் சில சுருள் முடிகள் நெற்றியில் விழ சில காதின் பக்கத்தில் விழுந்து முகத்தின் அழகை மேலும் அதிகரிக்க அப்படியே கண்ணனை
அள்ளிக்கொள்ளத்தோன்றும்.
ஆனால் அந்தச்சுருள் முடியையும் தெய்வத்துக்குச்சமர்ப்பிக்கும் சம்ஸ்காரம் யாதவர்களிடமிருந்தது
ராஜஸ்தானில் மவுன் ட் அபுவிற்கு அருகில் அரசூர் என்ற அம்பிகை கோயில் ஒன்று இருக்கிறது .
இங்குதான் கண்ணனின் முடி இறக்கும் வைபவம் நடந்தது இன்றும் பலர் இங்கு முடியிறக்குகிறார்கள்.
இதே போல் மற்றொரு புண்ணியஸ்தலம் தான் குஜராத்தின் டாங்கோர் துவாரகா
இங்கு ஒரு கிருஷணன் கோயில் உள்ளது அங்கு ஒரு தராசையும் காணலாம்
இது என்ன கோயிலில் தராசு ...அதுதான் துலாபாரம் நடந்த இடம்
ஒரு சம்யம் கண்ணனும் நாரதரும் துளசியின் மகிமையை வெளியில் கொண்டுவர நடத்திய நாடகம் ,,
ராதை ருக்மிணி சம்மதத்துடன் ஒரு சமயம் சத்தியபாமா கண்ணனை நாரதருக்குக்கொடுக்கும்படியான
சந்தர்ப்பம் ஏற்பட்டது நாரதரும் கண்ணனைப்பெற்றார் ஆனால் என்ன தோன்றியதோ கண்ணனை
அவர்களிடமே கொடுத்துவிட்டு கண்ணனின் எடைக்குத்தகுந்த பொருள் கேட்டார்
அவர்களும் இதற்கு சம்மதித்தனர் பின் ஒரு தராசு கொண்டுவரப்பட்டு அதில் ருக்மிணி தன் தங்க வைர நகைகளையும் வேறு பொருள்களையும் வைத்தாள் தராசு அப்படியே இருந்தது சத்தியபாமாவும் நவரத்தினகற்கள் ,மேலும் பல ஆபரணங்களை வைத்தும் தராசு அசையவில்லை
பின் ராதையிடம் இதைப்பற்றிச்சொல்லி அவள் உதவியை நாடினர் ராதை நெஞ்சு முழுவதும் கண்ணன் தான் நிறைந்திருந்தான் அவள் கண்ணனைப்பிரார்த்தித்தபடி ஒரு துள்சி இலையைத் தராசில் வைக்க அந்தத்தட்டு தாழ்ந்தது .
கண்ணன் அமர்ந்திருக்கும் தட்டு உயர்ந்தது
இந்த நிகழ்ச்சி நடந்த இடம் மிகவும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் இங்கு துளசியின் பூஜையும் நடக்கிறது
பிருந்தா அல்லது விருந்தா என்ற பெயர் பலருக்கு வைக்கப்படுகிறது
இப்போது சொல்லப்போகும் இடம் மிகச்சிறந்த இடம் அதுதான் குருக்ஷேத்ரா
கண்ணன் விஸ்வரூபமாகக் காட்சியளித்த இடம் இந்த விசுவரூபத்தைக் கண்டவர்கள் அர்சுனன் கர்ணன் பீஷமர்.
கீதைப்பிறந்த இடமும் இதுதான் எல்லா வைஷ்ணவகோயிலில் தினமும் ஒலிக்கப்படும் விஷ்ணு
சஹஸ்ரநாமம் பிறந்த இடமும் இதுதான்
பீஷ்மர் அம்பால் வீழ்த்தப்பட்டு அம்பால ஆனப்படுக்கையில் படுத்துக்கிடக்கிறார் அவருக்குத்தன்
உயிரை தன் இஷடப்படி விடும் சக்தி இருந்தது அதனால் உத்த்ராயணம் வரைக்காத்திருந்தார்
அவர் படுத்தபடுக்கை அருகே பிரும்மனால் உண்டாக்கப்பட்ட ஏரியும் இருந்தது.இதனால் அந்த இடத்தில் இறப்பு நிகழாது .
இந்த நேரத்தில் கன்ணன் பீஷ்மர் முன் தோன்றினான வெறும் கண்ணனாக அல்ல சங்கு சக்ரகதாபாணியுடன் அந்த மகாவிஷ்ணுவாகவே தோன்றினான் உடனே பீஷ்மர் மெய்மறந்தார் அவர் வாயிலிருந்து சஹஸ்ர நாமங்கள் விஷ்ணுவைக்குறித்து பொலபொலவென்று கொட்டின .
ரதசப்தமி வரை உயிருடன் இருந்து பின் அஷ்டமி அன்று தன் உயிரை விட்டார்
இதுவே பீஷ்மாஷ்டமி இன்றையதினம் சஹஸ்ரநாமம் சொல்ல மிகவும் உயர்ந்த நிலை எய்யலாம்
கண்ணன் இதுபோல் காலடி வைத்த இடம் பல வடநாட்டில் உள்ளன எழுத எழுத திகட்டாது தேன் போல் இனிக்கும்
ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்
No comments:
Post a Comment