ராமேஸ்வரத்தில் மூன்று சிவலிங்கங்களைத் தொழ வேண்டும் அதிலும் அனுமார் ஸ்தாபித்த லிங்கங்களை
முதலில் தொழுதப்பின்னரே ஸ்ரீ ராமர் பிரதிஷ்டைச்செய்த ராமேஸ்வர லிங்கத்தைத்தரிசனம் செய்ய
வேண்டும் அனுமார் கொண்டு வந்த லிங்கங்கள் இரண்டு .
அனுமாருக்கு யார் இரண்டு லிங்கங்களைக்கொடுத்தார் ? அவருக்கு எப்படி இது கிடைத்தது ?
ஸ்ரீராமர் கடலைக்கடக்க பாலம் அமைக்கும் முன் விக்னமில்லாமல் இருக்க ஒரு கணபதியை
உருவாக்கி கூடவே நவகிரஹங்களும் அமைத்து பூஜை செய்தார் அத்துடன் ஒரு சிவலிங்கத்தையும்
அங்குத் தன பெயரில் பிரதிஷ்டைச்செய்ய அனுமனைக் காசிக்கு அனுப்பி ஒர் லிங்கம் பெற்று வர
நினைத்தார் அனுமனை அழைத்தார்
"
"அனுமன் வேகமாக்ச் சென்று சங்கர பகவானிடம் ஒரு சிவலிங்கம் பெற்று ஒரு முகூர்த்த நேரத்திற்குள்
வந்துவிடு " என்றார்
என்ன ! என்னைப்பார்த்து ஒரு முகூர்த்த நேரத்துக்குள் வந்துவிடு என்கிறாரே ஸ்ரீராமர் இது எனக்குத்தெரியாதா? என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்ததாம் .
ஒரு நொடிப்பொழுதில் காசிக்குப்போய்விட்டார் அங்கு சிவபெருமானிடம் நடந்ததைச்சொல்லி
சிவலிங்கம் கேட்டார்.
சிவபெருமானும் "வாயு குமரா நானும் தெற்குப்பக்கம் செல்லவேண்டும் ஏனென்றால் அகஸ்தியர்
விந்தியமலையைத் தாழ்த்த இங்கிருந்து சென்று விட்டார் அவருக்கு என்னைப்பிரிந்த துக்கம்
தாங்கமுடியவில்லை நான் அவரைப்பார்க்கப்போகிறேன் இந்தா இரண்டு சிவலிங்கங்கள்.
ஒன்று ஸ்ரீராமருக்கும் மற்றொன்று என் பெயரிலும் ஸ்தாபிக்கப்படட்டும் " என்றவாறே
இரண்டு லிங்கங்களை அனுமனிடம் கொடுத்தார்.
ஒரு லிங்கத்திற்குப்பதில் இரண்டு லிங்கம் அதுவும் சிவபெருமானிடமிருந்து எனநினைக்கும்
போதெல்லாம் சிறிய கர்வம் தலைத்தூக்கியது ,
எல்லாம் அறியும் ஸ்ரீராமருக்கு அனுமாருக்குத்தோன்றிய இந்தக்கர்வத்தை முளையிலேயே
கிள்ளி எறிய திட்டம் கொண்டார்
முகூர்த்த நேரம் நெருங்க அனுமனைக்காணாமல் ஸ்ரீ ராமர் ரிஷிகளின் உத்தரவின் படி
தானே மணலைச்சேர்த்து ஒரு சிவலிங்கம் ஆக்கினார் அதைச்ஸதாபித்தார்,
பின்னர் கௌஸ்துமணியை நினைக்க அதுவும்வந்து சேர்ந்தது .அதை வைத்துக்கொண்டு பசுமாடுகள்
ஆடைகள் குதிரைகள் ஆபரணங்கள் எல்லாம் வரவழைத்தார் .இதை வைத்து ரிஷிகளை
உபசரித்தார் .எல்லோருக்கும் ராஜோபசர்ரம் தான் எல்லா ரிஷிகளும் திருப்தியுடன் வீடு திரும்பினர்.
வழியில் வேகவேகமாக அனுமன் வந்தார் ,
வரும் பெரியோர்களுக்கு வண்க்கம் தெரிவித்தப் பின் "மதிப்புக்குரிய பெரியோர்களே
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார்
அவர்களும் ஸ்ரீராமபிரான் சிவலிஙகப்பிரதிஷ்டை நடத்தி தங்களை உபசரித்ததையும் சொன்னார்கள்,
அனுமாருக்கு கோபம் வந்தது இந்த் ஸ்ரீராமர் என்னை ஏன் இது போல் அலைக்கழிக்க வேண்டும்
என்று நேராகவே அவரிட்ன் சென்றார்.
அவர் முகம் வாடி இருந்ததைப்பார்த்த ராமர் "ஏன் அனுமனே முகம்
வாடி இருக்கிறது?" என்று கேட்டார்
"சுவாமி நான் இலங்கைச்சென்று சீதாப்பிராட்டியைப்பார்த்து வந்ததற்கு
இது தான் பரிசா?காசிக்குப்போய் சிவலிங்கம் கொண்டுவரசொல்லிப்பின்
வருவதற்குள் நீங்கள் ஒரு லிங்கத்தைப்பிரதிஷ்டைச்செய்துவிட்டீர்களே!
என்னை ஏளனப்படுத்திவிட்டீர்களே !
கருணை மிக்க ராமன் புன்னைகைப்புரிந்தார் பின் தொடர்ந்தார்
"என் அருமை வாயு மைந்தனே நடந்தது நடந்துவிட்டது பரவாயில்லை
நான் பிடித்த இந்த மணல் லிங்கத்தை அகற்றி அதில் நீ கொண்டு வந்த
லிங்கங்களை வைத்து ஸ்தாபித்துவிடுகிறேன் ,"
அனுமனின் முகத்தில் மகிழ்ச்சி ,
"இதோ இப்பொழுதே அதை எடுத்துவிடுகிறேன் என்று அந்த மணல்
லிங்கத்தைப்பிடித்திழுக்க அது அசைந்துக்கொடுக்கவேயில்லை .
பின் தன் வாலில் அதைச்சுற்றி இழுக்க அந்த லிங்கம் அசையாமல் நின்றது
தன் வாலில் இன்னும் வேகம் செலுத்தி இழுக்க வால் அறுந்துப்போய்
சோர்ந்துப்போய் கீழே விழுந்தார் .மூர்ச்சையானார் ,
அங்குக்கூடியிருந்த வானரர்கள் சிரித்தார்கள் இத்தனை வீரம் பொருந்திய
அனுமானுக்கா இந்த நிலை?
அனுமன் மெள்ள க்ண் விழித்தார் அவர் கொண்டிருந்த கர்வம் போயிருந்தது,
தன் தவறை உணர்ந்தார் ,இராமனின் பாதாரவிந்தங்களில் விழுந்தார்
தம்மை மன்னிக்கும்படி பிரார்த்தித்தார் ,
ஸ்ரீ ராமன் தான் சரணாகத வதசலன் ஆயிற்றே. தன் ஆப்த நண்பன் பக்தன்
அனுமானிடம் தோன்றிய கர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஆசைக்கொண்டுதான் இப்படி ஒரு நாடகம் நடத்தினார் ,
ஆனால் அவர் அனுமார் கொண்டு வந்த இரண்டு லிங்கங்களையும் ஸதாபித்து பின் சொன்னார் " ராமேஸ்வரம் போன முழு பலன் வேண்டுமானால் இந்த இரண்டு காசிவிஸ்வ்நாத லிங்கங்களைத் தரிசித்தப்பின்னர்தான் நான் பிரதிஷ்டைச்செய்த ரமேஸ்வர லிங்கத்தை
பூஜைசெய்ய வேண்டும் அனுமானும் வாலருந்த நிலையிலேயே பாதங்கள்
மறைந்தபடியே காட்சித்தந்து அருள் புரிவார் "
அதே போல் தான் இன்றும் மக்கள் முதலில் அனுமன் கொண்டுவந்த
லிங்கங்களைப்பிரார்தித்து பின் மணலால் பிடித்த லிங்கத்தைக்காண வருகிறார்கள்,
இது ஆனந்த இராமயணத்தில் இருக்கிறது
.
Sunday, September 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment