குருக்ஷேத்ரா போர் முடிந்தது யுதிஷ்டிரர் மிகவும் யோசனையில் இருந்தார் இந்தப்பாண்டிய
வம்சம் பல இழப்புக்களைப் போரில் இழந்துவிட்டது இந்த வம்சம் மேலும் தழைத்து சிறப்பாக
ஆட்சி செய்து, வரும் தலைமுறைகளும் சிறப்பாக மகிழ்ச்சியாக அமைதியாக நாட்டை ஆள
வேண்டுமே ,,,,, இந்த யோசனையுடன் பீஷ்மரின் அறிவுரையையும் கேட்கலாம் என்று தோன்றி
அவரிடம் சென்றார். பீஷ்மர் அவரின் கலக்கம் அறிந்து பின் இதற்குப் பரிகாரமாக சோமவார அமாவாசை விரதம் கடைப்பிடிக்கச்சொன்னார் இந்த நாளில் பக்தர்கள் புனித நீரில் ஸ்னானம் செய்ய வேண்டும் உம்....கங்கை காவிரி கிருஷ்ணா நர்மதை கோதாவரி காசி திருவேணி பிரயாக் போன்ற நதிகள்.இதன பலன் அளவிடமுடியாதது குழந்தைப்பாக்கியம் ,மன அமைதி வளமான வாழ்க்கை உண்டாகும் .
சோமவார அமாவாசை என்றாலே நம் முன் அரசமரம் தோன்றும் இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும் பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி
பூஜை செய்துவைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணைக் கொடுக்க வேண்டும்
இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும் பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசிகள் பெற சோம்வார அமாவாசை மிகசிறந்த ஒரு நாள் வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்,நம் தமிழ் நாட்டில் இது போல் நான் பார்க்கவில்லை ,
அரச மரத்திற்கு அத்தனைச் சக்தியா? சம்ஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என்பது அரசமரம்
அரச மரக்குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னிஹோத்ரத்திற்குப் பயன் படும்
அரச மரத்தை வெட்டவோ எரிக்கவோ கூடாது
அரசமரத்திற்கு அரணி என்ற பெயரும் உண்டு அசுவம் என்றால் குதிரை ,,, இந்த அரச மரத்திற்கும் குதிரைக்கும் ச்ம்பந்தம் இருக்கிறது ஒரு சமயம் அக்னி பகவான் தேவசபையிலிருந்து மனம் வெதும்பி வெளியேறினார் ,அக்னியின் கோபம் என்ன என்று தெரியாமல் அவரைச் சமாதானம் செய்ய தேவர்கள் அவரை நோக்கி வந்தனர் அப்போது
அக்னி குதிரை வடிவில் தன்னை மாற்றிக்கொண்டு ஒரு அரச மரத்தில் மறைந்துக்கொண்டார். அசுவம் {குதிரை} அங்குச்சென்று மறைந்ததால் அசுவத்தவிருக்ஷம்
என்று பெயர் பெற்றது அரச மரம் பின் பிரும்மா தோன்றி எல்லா மரங்களை விட இது தனிச்சிறப்பைப் பெறும் என்று வாழ்த்தினார் .
பிப்பலாதர் என்ற முனிகுமாரர் அரச மரத்தின் பூஜ பலனால் தோன்றினார் ,
இவரது தந்தை அரக்கர்களால் கொல்லப்பட்டார் அதனால் மனம் நொந்துப்போய் கோபம் கொண்டு கிருத்த்யா என்ற தேவதையை அரசமரத்தின் அடிப்பாகத்தில் உண்டாக்கினார் பின்
அந்த அரக்கனைக்கொல்ல ஏவினார் அந்தத்தேவதையோ எல்லா அரக்கர்களையும் அழித்து
விட்டது இதனால் பிரும்மா அத்தேவதையை சமுத்திரத்தின் மத்தியில் எரியச்செய்தார்
இந்தத் தேவதை அரசமரத்தின் அடிப்பாகத்தில் தோன்றியதால் அரசமரத்தின் அடிப்பாகத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு வணங்குகிறோம் ,
மழலைச்செல்வம் கேட்க அரசமரவழிபாடு போல் வேறு எதுவும் இல்லை..சனிக்கிழமையில் அரசமரத்தின் எல்லா பாகங்களும்
வணங்கலாம் .அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளர அங்கு
அம்மன் கோயில் வந்துவிடும். அரசமரம் வேப்பமரம் மாமரம் வளர்க்க வாஸ்துவிற்கும் நல்லதாக அமைகிறது அரசமரம் வழிப்பட்டுப் பிறந்த குழந்தைக்கு அச்வத்த நாராயணன் என்று
பெயர் வைப்பார்கள் இரண்டு அரசமரங்கள் வளர்த்து அதற்கு கல்யாணம் செய்துவைப்பார்களாம் அப்படிச்செய்ய பல ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்களுக்குக்கூட
குழந்தை பாக்கியம் உண்டாகுமாம் ,,
Sunday, June 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment