Tuesday, January 6, 2009

"நீ வருவாயென "

அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?

ஏன் இந்தத் தாபம் ?

இதில் என்ன லாபம் ?

மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?

என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,,

காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,

உன் பசியை நான் அறிவேன் .

அன்புப் பாலைச் சுரப்பேன்,

மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே

!வந்துபுட்டான் பாவி மனுசன்

பால் கறக்கும் சின்னசாமி

பாலை ஒட்டக் கறந்து புட்டான்

,என் கண்ணீர் வடிவது தெரியலயா !

என் மன நிலை நீ அறியலயா ?"

பால் குவளையும் கையுமாய்நடந்தான்

மரத்தடிக்கு சின்னசாமி ,

அலாக்காகத் தூக்கினான் கன்றை ,

வைக்கோல் சிதறி விழுந்தது

அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை

,பசுவின் அலறல் மட்டும்

காற்றில் கலந்து அழுதது .

No comments: