அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?
ஏன் இந்தத் தாபம் ?
இதில் என்ன லாபம் ?
மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?
என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,,
காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,
உன் பசியை நான் அறிவேன் .
அன்புப் பாலைச் சுரப்பேன்,
மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே
!வந்துபுட்டான் பாவி மனுசன்
பால் கறக்கும் சின்னசாமி
பாலை ஒட்டக் கறந்து புட்டான்
,என் கண்ணீர் வடிவது தெரியலயா !
என் மன நிலை நீ அறியலயா ?"
பால் குவளையும் கையுமாய்நடந்தான்
மரத்தடிக்கு சின்னசாமி ,
அலாக்காகத் தூக்கினான் கன்றை ,
வைக்கோல் சிதறி விழுந்தது
அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை
,பசுவின் அலறல் மட்டும்
காற்றில் கலந்து அழுதது .
No comments:
Post a Comment