Wednesday, January 7, 2009
"கல்லை உடைக்கும் நீ"
இல்லை இல்லை !
உன் வயிற்றின் பசி அக்னி
ஆதவனையும் அமுக்கியதா?
காலிலோ செறுப்புமில்லை
,காலும் கல்லானதா?
மலைக்கு நடுவில் நீ
உன் மனமே பறையானதா?
கல்லை உடைக்கும் உன் கையும்
உடைத்து உடைத்து இரும்பானதா?
கருமமே கண்ணாகியதா?
மனமும் ஒடிந்து போனதா?
ஓ பாட்டாளியே! கடும் வெயில் உனக்கு நிலவானதா?
Tuesday, January 6, 2009
"நீ வருவாயென "
அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?
ஏன் இந்தத் தாபம் ?
இதில் என்ன லாபம் ?
மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?
என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,,
காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,
உன் பசியை நான் அறிவேன் .
அன்புப் பாலைச் சுரப்பேன்,
மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே
!வந்துபுட்டான் பாவி மனுசன்
பால் கறக்கும் சின்னசாமி
பாலை ஒட்டக் கறந்து புட்டான்
,என் கண்ணீர் வடிவது தெரியலயா !
என் மன நிலை நீ அறியலயா ?"
பால் குவளையும் கையுமாய்நடந்தான்
மரத்தடிக்கு சின்னசாமி ,
அலாக்காகத் தூக்கினான் கன்றை ,
வைக்கோல் சிதறி விழுந்தது
அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை
,பசுவின் அலறல் மட்டும்
காற்றில் கலந்து அழுதது .
சக்தியைச் சேமிப்போம்
சேமிக்கலாமே படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியைஇழக்கிறோம் ,காமத்தில் சக்திஅதிகமாக போகிறது ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பலநல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது,ஜே.வி செர்னே சொல்கிறார்"ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற் வார்த்தைகள்வாகனங்களாக உள்ளன . "செய்து முடிப்பேன்" என்ற வாகனத்தில்ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம் "சக்தியைச்சேமிப்போம்
அருள் புரிவாயே மாருதி
அருள் புரிவாய் மாருதியேஅருள் புரிவாய் மாருதியே
அல்லல் களைவாய் மாருதியே
வீரம் ஞானம் வெற்றி தந்துமன உறுதி வழங்கும் மாருதியே அசோக வனத்தில் அன்னையைக் கண்டாய்
அவள் சோக மனதில் ஆறுதல் தந்தாய்
ஸ்ரீ ராமனுடைய தூதனும் ஆனாய்
,எண்ணியதை முடித்தும் வைத்தாய் மாருதியே
இராம நாமத்தில் மூழ்கிப்போனாய் ,
சீதைக்கு கணையாழியும் கொடுத்தாய்
வாயு வேகத்தில் சஞ்சீவி கொண்டு
இலக்குவன் உயிரைக்காத்து நின்றாய் .
அஞ்சனையின் குமாரா மாருதியே
சிறிய திருவடி மாருதியே
சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற மாருதியே
பஞ்ச முகமான மாருதியே ,
ஈரேழுத்தலமும் புகழ்ந்து வணங்கும மாருதியே
செங்கமலத்திருவின் திருவருள் பெற்ற மாருதியே
காமனை வென்றவனே!காலத்தை வென்றவனே
காத்தருள்வாய் , நின் தாள் பணிந்தேன் அனுமானே
அன்புடன் விசாலம்