Friday, April 3, 2009

நமக்குள் ஒரு ராமாயணம்

நமக்குள்ளே ராமாயணம் ,,,,,,நமது காலசக்கரத்தையும் கர்ம சக்கிரத்தையும்ஓட்டுவது நமது புத்தி .இது விவேகத்தின் உதவியாலும் வைராக்கியத்தின்உதவியாலும் ஓட்டப்படுகிறது அந்தச்சக்கிரம் அன்பு என்ற வட்டத்தினாலும்உள்ளே இருக்கும் கம்பியின் வரிசைகள் தர்மத்தினாலும் செய்யப்பட்டு கர்த்தவினாலேயே ஓட்டப்படுகிறது இது நேராக ஓட சத்தியம் என்றஅச்சும் சாந்தி என்ற வழியும் தேவை ,,,,,ராமா என்ற புருஷன் பிருகிருதியை ஏற்கிறான் சீதை என்ற சைத்தன்யம் நம்உடலில் இருக்கும் பிரும்மனை தட்டி எழுபுகிறது .மாயையில் விழுந்துவிட்டால் பிரும்மஞானம் காணாமல் போக ரரமா என்ற புருஷன்காட்டில் அலைகிறான் சீதை என்ற சைத்தனயத்தைத் தேடுகிறான் .லக்ஷ்மணர்தான் நம் மனது ,எப்போதும் ராமபுருஷனுடன் இருக்கிறான் .வாலி என்பவன் தான் பலஇந்திரியங்களின் அடங்காதன்மை ,அதை அடக்க சுக்கிரீவன் என்ற விவேகம் உதவிக்கு வருகிறது ஹனுமான் தான் மனோதிடம் தைரியம் அசைக்க முடியாத நம்பிக்கை சமர்ப்பணம் ,இந்த ஹனுமான் என்ற திடம் அஞ்சா நெஞ்சம் இருளைக் கிழித்து வெளிச்சத்திற்குநம்மை அழைத்துப் போகிறது பெரிய கடல் தாண்டுவது மாயை என்ற கடலைத் தாண்டுவது .அரக்கர்களை வெல்வது நம்மிடம் இருக்கும் தமோகுணத்தைவெல்வது .முக்கியமாக கும்பகர்ணனை அழிப்பது .ரஜோகுணத்தை வெல்வது ராவணனை அழிப்பது விபீஷணனுக்கு முடிசூட்டுவது சத்வகுணாவின் வெற்றி அனுபவஞானத்துடன் பிரும்மஞானமும் சேர நடப்பது பட்டாபிஷேகம் ராமர் தசரதரின் மகன் , தசரதர் என்றால் பத்து தேர்கள் அந்தப்பத்து தேர்கள் நம் உடலில் ,,,ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து ஞானேந்திரியங்கள் ,நாலு மகன்கள் ,,,சத்யம் என்ற ராமர் பரதன் என்ற தர்மம் லக்ஷ்மணர் என்ற அன்பு ,சத்ருக்னர் என்றசாந்தி ,,,இந்த உடலில் இருக்கும் ராமாயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அலசிப்பார்த்தால் நாமஸ்மரணத்தினால் பலப்படுத்தினால் ராமாமிருதத்தைப் பருகலாம் ராமாய ராமபத்ராய் ராமசந்திராய வேதஸே ரகுநாதாய் நாதய சீதாய பதயே நம: அன்புடன் விசாலம்

No comments: