மாட்டுத்தோல்
நமக்கு காலணி
ஆட்டு மயிர்
குளிருக்கு கம்பளி
யானைத்தந்தம்
அழகான சிற்பம்
காளைக்கொம்பு
தலைக்குச் சீப்பு
மயில் இறகால்
வெயிலுக்கு விசிறி
மான் தோல்
தியானத்தின் ஆசனம்
மீனால் உடற்தெம்புக்கு
மீனெண்ணை
பாம்புத்தோல்
கண்கவரும் கைப்பைகள்
மனிதத்தோல்
எதற்குப் பயன் ?
உடம்பில் உயிர்
இல்லை என்றால்
ஒருபிடி சாமபல் மீதி
உயிர் இருக்கும் போதே
செய்வாய் நீ பிறருக்கு உதவி ,,,
அன்புடன் விசாலம்
Monday, December 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment